விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சீசன் 5 மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் கேப்ரில்லா செல்லஸ். தனது நகைச்சுவை திறமையின் மூலம் மக்களின் மனதைக் கொள்ளை கொண்டவரான இவர், வெள்ளித்திரையிலும் சிறு சிறு கதாபாத்திரத்தின் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தினார். இதனையடுத்து  டிக்டாக், பேஸ்புக், யூடியூப்  போன்ற சோஷியல் மீடியாக்களில் உணர்ச்சிப்பொங்க கவிதைகளை வாசித்து தனது திறமையை வளர்த்துக்கொண்டார் கேப்ரில்லா. இதனையடுத்து இவருக்கு சன்டிவியின் சுந்தரி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 






கிராமத்து ஏழைப்பெண்ணாக வலம் வரும் நாயகி சுந்தரி, தன்னுடைய கருமையான நிறத்தினால் படும் கஷ்டம் மற்றும் கணவர் ஏற்படுத்தும் துன்பம் என அத்தனையும் சமாளித்து வருவதுபோன்று கதைக்களம் அமையப்பெற்றிருக்கும். இச்சீரியலை ரசிப்பதற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் கிராமத்து லுக்கில் சீரியலில் வந்த சுந்தரி ஹேர் ஸ்டைலை மாற்றி லுக்கை மாற்றியுள்ளார். புது ஹேர்ஸ்டைல், புது லுக் என ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சுந்தரி. சுந்தரியின் புதிய லுக்குக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். புதிய லுக் சூப்பராக இருப்பதாகவும், வழக்கமாக சீரியலில் கலக்குவதைப் போல மேன்மேலும் கலக்கவும் என்றும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.






முன்னதாக, சன் குடும்ப விருதுகள் 2022 விழாவில், கேப்ரில்லா செல்லஸூக்கு ஃபேவரைட் ஹீரோயின் விருது வழங்கப்பட்டது.


மேடையில் விருதுவாங்கிய பிறகு கேப்ரில்லா தனது நடிப்பிற்கும், தான் வாங்கிய விருதுக்கும் அம்மா மற்றும் அம்மாச்சிதான் காரணம் என மேடையில் கண் கலங்கினார். ஆனால் தனது கணவரைப்பற்றி எவ்வித தகவலும் அவர் கொடுக்காத நிலையில் தான் இன்ஸ்டா வாயிலாக மன்னிப்பு கேட்டுள்ளார். “கேப்ரில்லா, தனது இன்ஸ்டா பதிவில், பாப்பா சாரி பாப்பா ஸ்டேஜ்ல பதட்டத்துல உன் பேர சொல்ல மறந்துட்டேன்“ எனக் குறிப்பிட்டார்.