சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர்கள் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள்; அவர்கள் ஒரு ஆர்ட்டிஸ்ட் என்பதையும் மறந்து வீட்டின் உறவினர்களாக எண்ணுகிறார்கள்; அப்படி இருக்கையில் அவர்களுக்கு சீரியலின் கதைப்படி ஏதாவது ஒரு சந்தோஷமான நிகழ்வோ அல்லது கவலை, கஷ்டம், சங்கடம் ஏற்பட்டாலோ ரசிகர்களும் அதற்கு ஏற்றார் போல் ரியாக்ட் செய்கிறார்கள்;அந்த வகையில் சீரியல் நடிகை ஒருவருக்கு வளைகாப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. 


 



 


பிரபலமான வில்லி :


சன் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மிகவும் ஃபேவரைட் சீரியலாக இருப்பது 'பாண்டவர் இல்லம் '. பாண்டவர் குடும்பம் மற்றும் ஜாமீன் குடும்பம் என கிராமிய பின்னணியில் இவர்களுக்கு இடையே இருக்கும் பகையை வைத்து இக்கதை பயணிக்கிறது.


பாண்டவர் இல்லம் சீரியலில் வில்லியாக ரோஷினி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அனு. இவர் ஏராளமான தொடர்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் அனு அறிமுகமானது விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஃபீஸ் தொடர் மூலம். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும் பல தொடர்களில் வில்லியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.  


 






 


எளிமையான வளைகாப்பு 


நடிகை அனு, விக்னேஷ் என்பவரை 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அனு தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவரின் வளைகாப்பு விழாவை மிகவும் எளிமையாக அவர்கள் வீட்டில் நடத்தியுள்ளனர்;


அந்த நிகழ்வில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை அனு; அதனோடு தனது கணவர் விக்னேஷ் குறித்தும் ஒரு அழகான குறிப்பை பதிவிட்டுள்ளார். 


" ஒரு எளிமையான வளைகாப்பு விழாவை நடத்த விரும்பினோம். இந்த நாளை நாங்கள் மிகவும் சந்தோஷமாக எங்களின் குழந்தையோடு இருக்க விரும்பினோம். எங்களை சுற்றி இருக்கும் அன்பானவர்கள் ஆசீர்வாதத்தோடு வளைகாப்பு நிகழ்வை முடித்து கொண்டோம்.


இந்த நிகழ்வு எனது மனதிற்கு மனநிறைவை கொடுத்தது. முதல்முறையாக  எனது கணவர் எனக்கு நலங்கு வைக்கிறார். வெட்கத்தில் எனது முகமே சிவந்து விட்டது. எங்களுக்கு உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளும் தேவை"  என போஸ்ட் செய்து இருந்தார் அனு. அனுவின் இந்த போஸ்ட் லைக்ஸ்களை குவித்து வருகிறது.