Watch Video: புது முடிவு எடுக்கப்போறேன்...பிக்பாஸ் வெளியே ஸ்ருதி முதல் வீடியோ!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்ருதி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்ருதி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.  

Continues below advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது. 100 நாட்கள் எபிசோடில் இதுவரை 37 நாட்கள் முடிந்துவிட்டன. அன்பு, பாசம், கோபம், சண்டை, ஏமாற்றம், ஏச்சுக்கள், பொறாமை என அத்தனை உணர்வுகளும் அவ்வப்போது வெளிப்பட பிக் பாஸ் வீடு பரபரப்பாகியுள்ளது.

நிகழ்ச்சியில் இருந்து இதுவரை  நட்சத்திரமும் மாடலுமான நதியா சாங், பிரபல யூடியூப் விமர்சகர் அபிஷேக் ராஜா மற்றும் நாட்டுப்புற பாடகர் சின்ன பொண்ணு ஆகியோர் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம், ஸ்ருதி எலிமினேட் ஆனார். கமல்ஹாசனின் பிறந்தநாளில் இந்த எலிமினேஷன் நடந்தது. 

முன்னதாக தீபாவளியை ஒட்டி பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டாட்டமும், விளையாட்டுகளும் களைகட்டியது. 

தொடர்ந்து எலிமினேஷன் ரவுண்ட் நடந்தது. இதில், பவானி ரெட்டி, அக்ஷரா, சுருதி, இசைவாணி, இமான், அபினய், சிபி, இக்கி பெர்ரி, நிரூப், மதுமிதா ஆகிய 9 போட்டியாளர்கள் இந்த வாரம் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இவர்களில், இமான் அண்ணாச்சி, இசைவாணி ஆகியோர் சனிக்கிழமை எபிசோடில் காப்பாற்றப்பட்டனர்.
பால்வார்த்த வருண்:

இந்த முறை எலிமினேஷன் சற்று சுவாரஸ்யமாக இருந்தது. ஸ்டோர்ரூமில் வைக்கப்பட்டிருந்த பால் நிரப்பப்பட்ட பாட்டில்களைக் கொண்டு வரச் சொன்னார்கள். பாட்டில்களில் இருந்த பாலை ஊற்றுமாறு கேப்டன் வருணிடம் கமல் கேட்டுக் கொண்டதால், பாட்டில்களில் தெரியும் பெயர்களின் வரிசையின் அடிப்படையில், போட்டியாளர்கள் காப்பாற்றப்பட்டனர். 

இறுதியாக, நிகழ்ச்சியில் இருந்து சுருதி வெளியேற்றப்பட்டதை கமல் வெளிப்படுத்தினார். தாமரைச் செல்வியிடமிருந்து வாங்கிய நாணயத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும்படியும் கூறினார். ஸ்ருதி ஆரம்பத்தில் தான் எலிமினேட் ஆனதை ஏற்க தயங்கினாலும் சில விநாடிகளில் நிலைமையை உணர்ந்து கொண்டு எலிமினேட் ஆனதை ஏற்றுக் கொண்டு வெளியேறினார்.


நெகிழ்ச்சியான வீடியோ:

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

ஹை, அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் ஸ்ருதி பெரியசாமி. என்னை உங்களில் ஒருவராக நினைத்து நீங்கள் கொடுத்து அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஒரு 100 நாட்கள் அந்த வீட்டிலிருந்து அந்த ட்ராஃபியை கையில் பிடித்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ அந்த அளவுக்கு எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளீர்கள். அதுவும் வெறும் 35 நாட்களில். எனக்கு வெளியில் வந்ததில் வருத்தமில்லை. ஆனால், நீங்கள் நான் அங்கு 100 நாட்கள் இருப்பேன் என நினைத்தவர்களை நான் திருப்திப்படுத்த முடியவில்லை. அதுதான் எனக்கு ஒரு வருத்தம். மற்றபடி எனக்கு வருத்தமில்லை. இன்று எனது பிறந்தநாள். எல்லோரிடமும் பேச இயலவில்லை. உங்கள் எல்லோர்கிட்டையும் நான் நேரம் எடுத்து நிச்சயம் பேசுறேன். இந்தப் பிறந்தநாளில் இருந்து நான் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறேன். நீங்கள் அதற்கும் உதவி செய்வீர்கள் என நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola