யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “பதான்” படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் ரிலீசுக்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கினாலும் வெளியான நாள் முதல் வசூல் வேட்டையில் வெளுத்து வாங்கி வருகிறது. 


 



ஷாருக்கான் ரீ என்ட்ரியை கொண்டாடிய ரசிகர்கள் :


ஷாருக்கான் ரீ என்ட்ரியை திரையில் காண்பதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துகொண்டு இருந்தார்கள். ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. திரையரங்கங்கள் நடன மேடைகளாக மாறியதை 'பதான்' படத்தை வெளியிட்ட திரையரங்கங்களில் பார்க்க முடிந்தது. இப்படி பல வகையான ரசிகர்கள் இருக்கையில் பதான் திரைப்படத்தை  பெரிய திரையில் பார்த்துவிட வேண்டும் என தீராத ஆசையால் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளனர் ஷாருக் ரசிகர்கள் சிலர். 


 






வங்கதேசத்தில் ஷாருக் ரசிகர்கள் :


பதான் திரைப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்கங்களில் வெளியிடப்பட்டதை காண ஷாருக்கான் ரசிகர்கள் குவித்தாலும் சில சட்ட சிக்கல்கள் காரணமாக வங்கதேசத்தில் வெளியிடப்படவில்லை. அதனால்  அவர்களின் ஃபேவரட் ஸ்டாரின் பதான் திரைப்படத்தை பெரிய திரையில் பார்க்கவேண்டும் என்பதற்காக டாக்காவிலிருந்து திரிபுராவின் அகர்தலா வரை ஒரு குடும்பம் பயணித்துள்ளது அதுவும் 'பதான்' திரைப்படத்தை பார்ப்பதற்காக மட்டுமே. இந்த குடும்பத்தின் வருகையை ரூபாசி சினிமாஸ் திரையரங்க உரிமையாளர் புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். 


 






இந்த போஸ்டிற்கு பதிலளித்த அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் "உங்களுக்கு எனது நன்றிகள். நான் இந்தியாவை சேர்ந்தவன். பணி நிமித்தமாக வங்கதேசத்தில் உள்ளோம். இங்கு பதான் திரைப்படத்தை திரையிட அரசாங்கம் அனுமதி மறுத்ததால் அருகிலுள்ள இந்திய நகரத்திற்கு சென்று பதான் படத்தை பார்க்க திட்டமிட்டோம். அதனை தொடர்ந்து ஜவான் படத்திற்காக காத்து இருக்கிறோம்" என பதிலளித்துள்ளார். 


தற்போதைய நிலவரப்படி 'பதான்' திரைப்படம் உலகளவில் கிட்டத்தட்ட 634 கோடி வசூலித்துள்ளது என கூறப்படுகிறது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.