Sri Reddy : 'ஆடையில்லாம நான் நின்னேன்.. என் குடும்பத்துக்கு பெரிய வலி..' வருந்தும் நடிகை ஸ்ரீரெட்டி

”கிளாமர் ரோல்ல நடிக்கனும்னு யாரும் வராதீங்க..10 ஆயிரம் பேர்ல ஒருத்தர்தான் இங்க நிலைக்க முடியும். என் நிலைமையை முன் உதாரணமா எடுத்துக்கோங்க.”

Continues below advertisement

ஸ்ரீரெட்டி :

Continues below advertisement

தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி  பல முன்னணி இயக்குனர்கள் நடிகர்கள் என்னை தவறான முறையில்  பயன்படுத்திக் கொண்டு கடைசியில் பட வாய்ப்பு கொடுக்காமல் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று அரை நிர்வாணமாக பொதுவெளியில் அமர்ந்து போராட்டம் நடத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் விஷால், நடிகர் ராகவா லாரன்ஸ் என கோலிவுட் பிரபலங்களின் பெயர்களும் இவரது புகார் பட்டியலில் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனம் பெறும் நபராக மாறினார் ஸ்ரீரெட்டி. தற்போது இவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யூடியூப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

” என் குடும்பத்தினரை அவமானப்படுத்திட்டேன் ‘

ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாணமானக போராட்டம் நடத்திய தருணத்தை சமீபத்தில்  நினைவு கூர்ந்தார். அப்போது “ என் அம்மா முன்னால கூட நான் ஆடை மாத்தமாட்டேன். அப்படிப்பட்ட நான் எல்லோருக்கும் முன்னால ஆடையை கழற்றி போராட்டம் நடத்தும் பொழுது , என் வீட்டில் உள்ள அம்மா, அப்பா , தம்பி மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைக்கும் பொழுது கஷ்டமாக இருக்கு. அவங்களுக்கு அவமானமா இருந்திருக்கும்.என் கூட யாருமே பேசுறது கிடையாது. நிறைய பேர் அம்மாக்கிட்ட எடுத்து சொன்னாங்க. ஆனாலும் அவங்க என் மீது கோவமாகத்தான் இருக்காங்க. சின்ன வயசுல எந்த கவலையும் இல்லாம , அம்மா மேல படுத்து தூங்கும் அந்த தருணங்களை அடிக்கடி நினைத்து பார்ப்பேன். கிளாமர் ரோல்ல நடிக்கனும்னு யாரும் வராதீங்க..10 ஆயிரம் பேர்ல ஒருத்தர்தான் இங்க நிலைக்க முடியும். என் நிலைமையை முன் உதாரணமா எடுத்துக்கோங்க. பெரியவங்க சொல்லுறத கொஞ்சமாவது கேளுங்க “ என வருந்தியுள்ளார் ஸ்ரீரெட்டி.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola