கவிஞர் சினேகனின் மனைவி கன்னிகாவின் புது கெட்டப்பை பார்த்து அம்மணிக்கு என்னாச்சு என்று சினேகன் ரசிகர்கள் எல்லாம் படு ஷாக்கில் உள்ளனர்.


நடிகர் , பாடலாசிரியர் , அரசியல்வாதி என அறியப்படுபவர்  கவிஞர் சினேகன். ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என குறிப்பிட்ட  சில படங்களில் மட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார் சினேகன்.  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் , கமல் தொடங்கிய மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட சினேகன் அதிலும் வெற்றி பெறவில்லை. 


கவிஞர் வைரமுத்துவிடம் ஐந்தாண்டு காலம் உதவியாளராக பணிபுரிந்தார்.அதன் பிறகு பல வருட காத்திருப்பிற்கு பின்னர் ‘புத்தம் புது பூவே’ என்ற திரைப்படத்தில் பாடலாசிரியராகும் வாய்ப்பு சினேகனுக்கு கிடைத்தது. தமிழ் சினிமாவில்  இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் கிட்டத்தட்ட 2,500 க்கும் மேற்பட்ட பாடல்களை சினேகன் எழுதியுள்ளார். அதில் பல பாடல்கள் இன்றளவு ஹிட் லிஸ்டில் உள்ளன. 


இந்நிலையில் சினேகன் அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.




அவர் திருமணம் செய்து கொண்ட கன்னிகா சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் , நடிகையாகவும் இருந்தவர். கே. பாலசந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரியக் குறி தொடரின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தேவராட்டம், அடுத்த சாட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சன் டி.வியில்  ‘கல்யாண வீடு’  என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தவிர சிலம்பத்தை முறையாக கற்று தேர்ந்தவர். தன்னை ஒரு எழுத்தாளராகவும் கன்னிகா அறிமுகப்படுத்திக்கொள்கிறார். 


இந்நிலையில் சினேகன், மனைவி கன்னிகா ரவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷார்ட் ஹேருடன் டாம் பாய் லுக்கில்  சில புகைப்படங்களை வெளியிட்டார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும், ஏன் இப்படி? உங்களது அழகே ஹோம்லி லுக் தான், முடிதான் உங்களுக்கு அழகு எனக் குமுறித் தீர்க்க இது விக் தான் உண்மையான ஹேர்ஸ்டைல் இல்லை என விளக்கம் கூறி இருக்கிறார்.  


ஆனால், சிலரோ கன்னிகா உங்களுக்கு இந்த பாய்ஸ்ட்ரஸ் லுக் ரொம்பவே சூப்பரா இருக்கு. இதையே கன்டினியூ பண்ணுங்க என்று சபாஷ் சொல்லியிருக்கிறார்கள். ஆடையும், அலங்காரமும் அவரவர் விருப்பம். தனிநபர் தனக்கு விருப்பமான உடை, ஒப்பணை செய்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என சிலர் பதிவிட்டுள்ளனர்.