தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் தற்போது மிகவும் பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனியின் இயக்கத்தில் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்து வருகிறார்.


இரு படத்தின் படப்பிடிப்பும் மிகவும் மும்மரமாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. விடாமுயற்சி திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக திட்டமிட்டு இருப்பதால் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை 2025ம் ஆண்டு பொங்கலுக்கு எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. அதன் படப்பிடிப்பும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


 



'விடாமுயற்சி' படத்தின் அப்டேட் எதுவும் பல மாதங்களாக வெளியமாக இருந்ததால் படம் கைவிடப்பட்டதாக சில வந்ததிகள் சோசியல் மீடியாவில் பரவி வந்தன. அதை பொய்யாக்கும் விதமாக படக்குழு தற்போது ஒவ்வொரு அப்டேட்டாக கொடுத்து வருகிறது. அந்த வகையில் படத்தின் துணை நடிகர்களான ஆரவ், ரெஜினா, அர்ஜுன், திரிஷா உள்ளிட்டோரின் போஸ்டர் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.




இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் எஸ்.ஜே. சூர்யா. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிகர் அஜித்தை சந்தித்து அவருடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டார். அதை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்த எஸ்.ஜே. சூர்யா "பல வருடங்களுக்குப் பிறகு எனது வழிகாட்டியான ஏ.கே தி கிரேட்டை சந்தித்த மகிழ்ச்சியான தருணம்" என கேப்ஷன் பகிர்ந்து இருந்தார்.  அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் கையில் ரத்த கறையுடன் இருப்பதை பார்க்கையில் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது என தெரிகிறது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. 







நடிகர் எஸ்.ஜே. சூர்யா இயக்குநராக அறிமுகமான 'வாலி' படத்தின் ஹீரோ அஜித்குமார். அப்படம் இருவரின் திரைப்பயணத்திலும் மிக முக்கியமான படமாக அமைந்தது. அதற்கு முன்னரே ஆசை மற்றும் உல்லாசம் உள்ளிட்ட படங்கள் முதலே உறவு நீடித்து வருகிறது. அன்று முதல் இவர்களின் நட்பு இன்று வரை சிறப்பாக இருக்கிறது.