புகழ்பெற்ற பின்னணி பாடகரான  சக்திஸ்ரீ கோபாலன் டெஸ்ட் திரைப்படத்திற்காக முதல் முறையாக இசையமைப்பாளராக பரினமிக்க உள்ளார்.


தமிழ்ப்படம் , விக்ரம் வேதா ஆகியத் திரைப்படங்களின் தயாரிப்பாளரான எஸ் சஷிகாந்த் இயக்குனராக தனது முதல் படத்தை இயக்கி வருகிறார். கிரிக்கெட்டை மையப்படித்தி எடுக்கப் படும் இந்தப்  படத்தில் நடிகர் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் பெயர் டெஸ்ட்.


மாதவன் மற்றும் சித்தார்த் கடைசியாக இணைந்து நடித்தப் படம் 2004 இல் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்துத் திரைப்படத்தில்தான். கிட்டதட்ட19 ஆண்டுகளுக்குப் பின்பு சேரும் இந்த கூட்டணி  ஏற்கனவே  போதுமான அளவிற்கு படத்தின் மேல் கவனத்தை ஈர்த்துவிட்டிருந்த நிலையில் தற்பொது மற்றுமொரு உற்சாகமளிக்கும் செய்தியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.


பின்னணிப் பாடகரான சக்திஸ்ரீ கோபால முதல் முறையாக இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவலை வெளியிட்டது வேறு யாரும் இல்லை. நமது இசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மான் தான். தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இந்த தகவலை வெளியிட்டதுடன் இசையமைப்பாளராக உருவெடுக்கும் சக்திஸ்ரீ கோபாலனுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளார். இதை பார்த்த சக்திஸ்ரீ ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்ததுடன் டெஸ்ட் திரைப்படக் குழுவிற்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதை நினைத்து தான் மிகவும் உற்சாகமாக உணர்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சக்திஸ்ரீ. இந்த தகவல் டெஸ்ட் திரைப்படத்தின் மேல் உள்ள ஆர்வத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது.






 


தனது குரலழகிற்காக எக்கசக்கமான ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்தவர் சக்திஸ்ரீ கோபாலன். அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற அக நகப் பாடலைப் பாடிய சக்திஸ்ரீ கோபாலன் ரசிகர்களால் கொண்டாடப் பட்டு வருகிறார். சக்திஸ்ரீ கோபாலன் ஒருப் பாடலை பாடியிருக்கிறார் என்றால் அந்தப் பாடல் நிச்சயமாக வைரல் ஆகும் என்பது எழுதப்படாத விதியாக மாறியுள்ளது. மரியான் படத்தில் இடம்பெற்ற எங்கபோன ராசா, மெட்ராஸ் படத்தில் நான் நீ, காஞ்சனா 2 படத்தில் வாயா வீரா என இவர் பாடிய பாடகள் ஒவ்வொன்றும் மனதை இளக வைப்பவை. இந்த குரல்லுக்கு சொந்தக்காரர் தற்போது சொந்தமாக இசையமைக்கப் போகிறார் என்கிற செய்தி பலவித எதிர்பார்ப்புகளை தூண்டக்கூடியதாக இருக்கிறது.


இந்த ஆண்டு இதுவரை சக்திஸ்ரீ கோபால் பாடி இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த இரண்டு பாடலும் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் அவர் பாடியவை. முன்பே குறிப்பிட்டது போல் முதலாவது பாடல் அக நக. பொன்னியின் செல்வன் 2 இல் இடம்பெற்றது. அடுத்ததாக சிம்புவின் பத்து தல படத்தில் இடம்பெற்ற நினைவிருக்கா பாடல்.