Just In





Singer Krish: 'அடிச்சா எந்திரிக்காத அளவிற்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும்' -பாடகர் கிரிஷ் அதிரடி.
லண்டனுக்கு இளையராஜா இசையை கற்பிக்க போனாரா? கற்றுக்கொள்ள போனாரா? என்று தெரியவில்லை. அவருடைய தேடலுக்காக நாம் அனைவரும் அவரை வணங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மகளிர் தினத்தை ஒட்டி மகளிர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை போக்கும் வகையில் சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாடகரும் நடிகருமான கிரிஷ் கலந்து கொண்டார். இதில் கலந்துகொண்ட பெண்களுக்கு மன அழுத்தத்தில் இருந்து விடுபட மனோ தத்துவ நிபுணர் மஞ்சு ஸ்ரீ பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதையும் படிங்க46 வயதில் நிறைமாத கர்ப்பம்! காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி நடிகை சங்கீதாவின் பிரெக்னென்சி போட்டோஸ்!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாடகர் கிரிஷ், "பெண்களுக்கு அதிகப்படியாக மனரீதியான பாதிப்பு உள்ளது. அதனை கண்டறிந்து சீர் செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். பெண்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு தன்னார்வலர்கள் முன் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். காலங்கள் மாறுவதை போல ஆண்களும் மாறிகொள்ள வேண்டும். பெண்களை பொருளாக பார்க்காமல் மனிதராக பார்க்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் இருந்து பெண்களை பிரிக்க வாய்ப்பே இல்லை என்ற அவர், ரீல்ஸ்ல இருந்து வெளியே வந்து பெண்கள் நல்ல உணவு சமைப்பாங்கனு எதிர்பார்க்குறோம் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கனும்னா; அடிச்சா எந்திரிக்காத அளவிற்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: Champions Trophy 2025: தடைகளை உடைத்த இந்தியா - சாதனைகளை குவித்த ரோகித் & கோலி - மைதானத்தில் உற்சாக நடனம்
இளையராஜாவின் லண்டன் சிம்போனி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அங்கு இளையராஜா இசையை கற்பிக்க போனாரா? கற்றுக்கொள்ள போனாரா? என்று தெரியவில்லை. அவருடைய தேடலுக்காக நாம் அனைவரும் அவரை வணங்க வேண்டும். அவர் உழைச்சதால் அவருடைய பாட்டுக்கு காப்புரிமை கேட்கிறார் என தெரிவித்தார்.