Sivangi Krishnakumar | பாத்ரூம் கதவை சாத்திக்கொண்டு அழுத சிவாங்கி ! யாரையும் நம்பாதீங்க என இன்ஸ்டாவில் உருக்கம் !

"ஆனால் அது அவள் சொல்லித்தான் எங்களுக்கே தெரியும். அவள்  மனம் திறந்து இதையெல்லாம் பகிர வேண்டும் என்பதுதான் எனக்கு ஆசை “

Continues below advertisement

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சிவாங்கி.பாடகி பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான சிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்தான் முதலில் கலந்துக்கொண்டார் என்றாலும் , இவருக்கு அதிக அளவிலான பிரபலத்தை ஏற்படுத்திக்கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். அந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களை நிறைவடைந்ததை அடுத்து தற்போது மூன்றாவது சீசனும் ஒளிபரப்பாகி வருகிறது. அதுலும் சிவாங்கி கோமாளியாக அசத்தி வருகிறார்.

Continues below advertisement

அது மட்டுமலாமல் ஆல்பம் பாடல்கள் பாடுவது, திரைப்படங்களில் நடிப்பது , சினிமாவில் பாடல்கள் பாடுவது என படுபிஸியாக இருக்கிறார் சிவாங்கி. இன்ஸ்டாகிராமிலும் இவர் செம ஆக்டிவ். இந்த நிலையில் சிவாங்கி சமீப காலமாக ஃபீலிங் கலந்த ஸ்டேட்டஸ்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நீங்கள்  தனிமையில் இருக்கிறீர்கள் என்பதற்காக டாக்ஸிக் மனிதர்களுடன் மீண்டும் போய் பழகாதீர்கள் . தாகமாக இருக்கிறது என்பதற்காக விஷத்தை குடிக்க முடியாதல்லவா “ என்ற வரிகளை பகிர்ந்திருந்தார்.


இதேபோலத்தான்  சில நாட்களுக்கு முன்பு ஒரு ஸ்டேட்டஸ் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் ” சிலர் உங்களை பயன்படுத்த மாட்டேன் என சொல்லி சொல்லி உங்களை கடைசியாக முழுவதும் பயன்படுத்தி காகிதம் போல தூக்கி போடுவார்கள் “ என குறிப்பிட்டிருந்தார். இதே போலகடந்த 2020 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் ” நீங்க இந்த வருடம் என்ன விஷயத்தை கற்றுக்கொண்டீர்கள் ?” என்ற கேள்விக்கு சிவாங்கி , யாரையும் கண் மூடி தனமாக நம்பக்கூடாது என்பதைத்தான் என பதில் கொடுத்திருந்தார்.

சமீபத்தில் சிவாங்கியின் அம்மா , பின்னி கிருஷ்ணகுமாரும் நேர்காணல் ஒன்றில் “ சிவாங்கி எந்த கஷ்டத்தையும் எங்களிடம் ஷேர் செய்ய மாட்டாள் . சமீபத்தில் அவளிடம் யாரோ புண்படும்படி பேசியதாக கூறி பாத்ரூமில் உட்கார்ந்து அழுததாக சொன்னாள். ஆனால் அது அவள் சொல்லித்தான் எங்களுக்கே தெரியும். அவள்  மனம் திறந்து இதையெல்லாம் பகிர வேண்டும் என்பதுதான் எனக்கு ஆசை “ என குறிப்பிட்டுருந்தார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்பொழுது சிவாங்கி கடந்த காலங்களில் யாரோ ஒரு நபரால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் என்பது தெளிவாக புரிகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola