2007 ஆம் ஆண்டு ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே பொதுவெளியில் ஹெச்.ஐ.வி விழிப்புணர்வுக்கான மேடையில், ஷில்பா ஷெட்டியை கட்டிப்பிடித்து முத்தமிட்ட நிகழ்வைத் தொடர்ந்து ஷில்பா ஷெட்டி மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட பொது இடங்களில் ஆபாச நடத்தை தொடர்பான வழக்குகளில் இருந்து மும்பையில் உள்ள மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.


ராஜஸ்தானில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கு மும்பையில் உள்ள பல்லார்ட் பியர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஷில்பா ஷெட்டி, தனது வழக்கறிஞர் மதுகர் தல்வி மூலம் வழக்கை வாதிட்டார். இதில் பங்கு உள்ள மற்றொருவரான ரிச்சர்ட் கெரே தன்னை முத்தமிட்டபோது, ​​அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதுதான் தன் மீதான குற்றச்சாட்டு என்று டிஸ்சார்ஜ் மனுவில் கூறியிருந்தார். மனுவில் கூறப்பட்டுள்ளதுபடி, எந்த வித கற்பனையும் இன்றி, ஷில்பா ஷெட்டி ஒரு சதிகாரரோ அல்லது எந்தக் குற்றத்தின் குற்றவாளியோ இல்லை என்று கூறப்பட்டுள்ளது, அவர் மீது பதிவு செய்யப்பட்ட சட்டப் பிரிவுகளை இந்த செயலுக்காக அவர் மீது பயன்படுத்த முடியாது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.



அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 292 (ஆபாசமான புத்தகங்கள் விற்பனை), 293 (ஆபாசமான பொருட்களின் விற்பனை) மற்றும் 294 (ஆபாசமான செயல்கள் மற்றும் பாடல்கள்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவப்படுத்துதல் (தடை) ஆகிய வழக்குகள் பதியப்பட்டிருந்தன. இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் சிறியவை மற்றும் ஆதாரமற்றவை என்று டிஸ்சார்ஜ் மனு கூறியது, மேலும் அவருக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகார் பிரிவுகளின் கீழ் எந்த வெளிப்படையான செயலையும் அவர் செய்யவில்லை என்று கூறியுள்ளது.


எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான தொண்டு நிறுவனத்தில் மட்டுமே அவர் பங்கேற்றதாக அது கூறியது. மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கேதகி எம் சவான், கடந்த வாரம் தனது உத்தரவில், ஷெட்டிக்கு எதிரான குற்றச்சாட்டு "ஆதாரமற்றது" என்று கூறி, அவரை வழக்கில் இருந்து விடுவிக்க அனுமதித்தார்.



கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை அனுமதியின்றி தயாரித்த வழக்கில் ஏகப்பட்ட புகார்கள் குவிந்த நிலையில், நாட்டையே உலுக்கிய செய்தியாக மாறியது. முதலில் கணவருக்காக வாதாடிய நடிகை ஷில்பா ஷெட்டி பின்னர் அது பற்றி தனக்கு ஒன்றுமே தெரியாது என பின் வாங்கியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படி சர்ச்சைகளை சுற்றியே ஷில்பா ஷெட்டியின் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது என்று வருந்திய ரசிகர்கள் எப்படியோ ஒரே ஒரு வழக்காவது முடிந்ததே என்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்.