கடந்த 2005-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நயன்தாரா. தொடர்ந்து ரஜினி. விஜய் அஜித். சரத்குமார், சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி ஜெயம்ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர் சமீப காலமாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 


விக்னேஷ் சிவனுடன் காதல்


இந்நிலையில். நானும் ரவுடிதான என்ற படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்த நயன்தாரா. பாடங்களில் நடித்துக்கொண்டே தனது காதலருடன் வெளியில் செல்வது வெளிநாடு செல்வது என பிஸியாக இருந்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் இருவரும் தனி விமானத்தில் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.



மகாபலிபுரத்தில் திருமணம்


நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இதுநாள் வரை காதலராக இருந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் தற்போது கணவன் மனைவியாக மாறப்போகின்றனர். நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் நாளை (9-ந் தேதி) நடக்கிறது. இந்த திருமணத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


திருமணத்தில் ஷாருக்கான்


ஜவான் திரைப்பட அறிவிப்பு வந்த பரபரப்பே இன்னும் ஓயவில்லை. இந்த நிலையில் இந்த திருமண விழாவுக்கு நடிகர் ஷாருக்கான் வருவாரா என்ற கேள்வி எழுந்தது வந்தது. ஆம், அவர் வரப்போகிறார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஷாருக்கான் வரும் பட்சத்தில் படம் வருவதற்கு முன்பாக நயன்தாரா ஷாருக்கான் இருவரையும் ஒன்றாக பார்ப்பதற்கான வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கும். ரசிகர்களும் அதனை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.



ஷாருக் - நயன் படம்


ஜூன் 2, 2023 அன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள, அட்லீயின் ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா நடிக்கிறார். சமீபத்தில் மோஷன் போஸ்டரைப் பகிர்ந்த இயக்குனர் அட்லீ, "உணர்ச்சி, உற்சாகம் மற்றும் ஆசீர்வாதமாக உணர்கிறேன். நான் உங்களை பார்த்துதான் வளர்ந்தேன், ஆனால் நான் உங்களையே இயக்குவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை." என்று எழுதி இருந்தார். 


பலத்த பாதுகாப்பு


பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில், பெரும் பிரபலங்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருப்பதால், இந்த திருமண விழாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் யாருக்கும் திருமணத்தில் அனுமதி கிடையாது. இந்த திருமணத்திற்கும் அனுமதி பெறுவதற்கு பாஸ்வேர்டு கொடுக்கப்பட்டுள்ளதாம். அதனை கூறினால்தான் உள்ளே அனுமதிக்கப்படுவார்களாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.