ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு பிரபலமான தொடர்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சினிவாவைப் போல தொலைக்காட்சி  தொடர்களுக்கும் தற்போது ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். கொரோனா காலக்கட்டத்தில் திரைப்படங்கள் பெரிதும் வெளியாகததால், சீரியல்களே மக்களின் பொழுதுபோக்கைக்கூடியதாக இருந்தது. ஸ்மார்ட்போன்கள் அனைவரும் கைகளில் இருப்பதால்,ஓடிடி தளங்கள் மூலமும் சீரியல்களை எங்கிருந்தாலும் பார்க்கின்றனர். அந்த வகையில் மக்களிடம் போய் சேர்ந்துள்ளது.


இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’, ‘சத்யா’ ஆகிய இரண்டு சீரியல்கள் நிறுத்தப்படும் என்று அந்த தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. 1000 எபிசோட்களுக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ள இந்த தொடர் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த  சீரியலில் அஸ்வினி, புவியரசு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 


இதேபோல், மற்றொரு சீரியலான ’சத்யா’ சீரியலும் நிறுத்தப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 800 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகியுள்ளது. ஆயிஷா, விஷ்ணு உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகிறார்கள். மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த இரண்டு சீரியல்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர். இரண்டு சீரியல்களின் கடைசி அத்தியாங்களும் வரும் 24ஆம் தேதி ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென்று வெளியான இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


 






இந்த அறிவிப்பு தொடர்பாக ஜீ தமிழ் நிர்வாகம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அன்பான நேயர்களுக்கு வணக்கம். உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி. எதிர்பாராத காரணங்களால், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி மற்றும் சத்யா ஆகிய இரண்டு தொடர்கள் வரும் வாரங்களில் இருந்து நிறுத்த உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இரண்டு தொடர்களின் கடைசி அத்தியாயங்கள் அக்டோபர் 24, ஞாயிறு அன்று ஒளிபரப்பப்படும். தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி” எனப்பதிவிடப்பட்டுள்ளது.


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண