தமிழ் சினிமாவில் அறிமுகமாக ஆன ஓரிரு படங்களிலே மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை சமீரா ரெட்டி. அசல், வாரணம் ஆயிரம், வேட்டை, வெடி, நடுநிசி நாய்கள் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடிக்கத்தன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். 2002ம் ஆண்டு இந்தியில் வெளியான 'மைனே தில் துஜ்கோ தியா' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தார். பெரும்பாலும் இந்தி படங்களில் நடித்துள்ள சமீரா ரெட்டி சில தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி படங்களிலும் நடித்துள்ளார். 




'வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமீரா ரெட்டி மிக பெரிய வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்ததுடன் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். அதை தொடர்ந்து பல மொழிகளிலும் பல படங்களில் நடித்த வந்த சமீரா ரெட்டி 2014ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை பாரம்பரியமான மகாராஷ்டிரா முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய சமீரா ரெட்டி சோசியல் மீடியாவில் வழக்கம் போல மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். 



 


சமீரா ரெட்டி - அக்ஷய் வர்தே தம்பதியினருக்கு ஹான்ஸ் வார்டே என்ற ஒரு மகனும், நைரா வார்டே என்ற ஒரு மகளும் உள்ளனர். ஒரு தாயாக சிறந்த ஒரு அனுபவத்தை கொண்டாடிவரும் சமீரா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்க்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் போது மகள் நைராவை எதிர்பார்த்து காத்திருந்த தருணம் குறித்து உணர்ச்சிகரமான வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். "நைரா நான் என் கருவில் சுமக்கும் போது எனக்கு வயது 41. 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாங்கள் அவளுக்காக  காத்திருந்தோம். அவள் என்னுடைய பயத்தை போக்கினாள். என்னுடைய உள்ளுணர்வை என்றுமே நம்பவேண்டும் என்னை நானே சந்தேகித்து கொள்ள கூடாது என்பதை உணர்ந்தேன். இது தான் பெண்மையின் சக்தி" என போஸ்ட் செய்து இருந்தார். 






 


"நீ எங்களை தேர்ந்து எடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. மகளே உன்னை நேசிக்கிறேன். என்னுடைய முதல் கர்ப்பம் அவ்வளவு எளிதாக இல்லை. ஆனால் 2018ம் ஆண்டு அவள் என்னிடம் வருவது போன்ற ஒரு கனவு இருந்தது. அதை நான் முழுமையாக நம்பி எதிர்கொண்டேன். என்னை சுற்றிலும் மிகவும் அன்பானவர்கள் இருந்ததால் நான் மிகவும் அதிர்ஷ்டமானவள்" என கர்ப்பமாக இருந்த போது செய்யப்பட்ட சடங்கின் சமயத்தில் எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.