கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் ரோசியேட் கங்கா என்னும் ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருக்கிறார் சமந்தா. இப்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கும் சமந்தா, ரிஷிகேஷில் இருக்கும் மஹரிஷி மஹேஷ் யோகி ஆசிரமத்துக்கு தான் வந்திருப்பதாகவும், இது தனது குழந்தைப்பருவ நினைவுகளை கொடுப்பதாகவும் பதிவிட்டிருக்கிறார்






Beatles என்னும் இசை ஆல்பம் இங்குதான் தயாரிக்கப்பட்டது. இங்கு நிற்பது சந்தோஷமாக இருக்கிறது. இங்குதான் 'Transcendental Meditation' என்னும் தியானத்தையும் இங்குதான் செய்தார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் சமந்தா.






மேலும் அவர் பகிர்ந்திருக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ”1976-78 காலங்களில் பிரம்மச்சாரினிகளும், சந்நியாசிகளும் இங்குதான் சாதனை செய்தார்கள் என்றும், உலகப்புகழ்பெற்ற பீட்டில்ஸ் ஆல்பம் இங்குதான் படைக்கப்பட்டது” என்றும், தனக்கு இதையெல்லாம் பார்த்தால் சின்ன வயது ஞாபகங்கள் வருவதாகவும் போஸ்ட் செய்திருக்கிறார் சமந்தா.


நாக சைதன்யா பிரிவுக்குப் பிறகு, நண்பர்களுடன் நேரம் செலவழித்து வரும் சமந்தா, பயணங்களையும் மேற்கொண்டிருக்கிறார் என அறியமுடிகிறது. தனக்கு எதிராக அவமதிக்கும் வகையில் போலி செய்திகளைப் பரப்பும் ஊடகங்களின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது