தென்னிந்திய முன்னணி கதாநாயகி சமந்தா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒரு செலிப்ரிட்டி. தனது போட்டோ சூட், அடுத்த திரைப்படங்கள் என உடனுக்குடன் அப்டேட் கொடுத்து ரசிகர்களுடன் எப்போதுமே கனெக்டாக இருக்கிறார்.சமந்தா தனது கடின உழைப்பால் தனக்கான அங்கீரத்தை பெற துவங்கியிருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை.  கடந்த 5 வருடங்களை ஒப்பிடும் பொழுது சமந்தா நிறைய மாற்றங்களை சந்தித்திருக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையை தாண்டி அவர் ஃபிட்னஸில் அதிக அக்கறை செலுத்தும் சமந்தா , சில நாடிகளாக தனது சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்டிவாக இல்லை கவனித்தீர்களா? 







அடிக்கடி புகைப்படங்களையும் , ஸ்டோரிக்களையும் பகிரும் சமந்த கடந்த 10 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் யசோதோ டீசரை பகிர்ந்ததோடு சரி , அதன் பிறகு ஆக்டிவாகவே இல்லை. இது குறித்து விசாரித்த பொழுது , அவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது. பொதுவெளியில் இது குறித்து பகிர விருப்பமில்லாமல் , சமந்தா தற்போது ஓய்வில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இப்போது வரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இது அவரது ரசிகர்களை கலக்கமடைய செய்திருக்கிறது. யசோதா , சாகுந்தலா உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கும் சமந்தா , தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ என்னும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் படப்பிடிப்புகள் ஏற்கனவே துவங்கப்பட்ட நிலையில் , சமந்தாவின் உடல்நிலை  காரணமாக தற்போது  அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் குஷி திரைப்படம் திட்டமிடப்பட்ட நேரத்தில் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.







சமந்தா தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் ஹிந்தியிலும் தனது அறிமுகத்தை கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு நிறைய பாலிவுட் பட வாய்ப்புகளும் வரத் தொடங்கின. சமீபத்தில் கரன் ஜோகரின் சர்ச்சை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனது திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியதற்கு , நாக சைத்தன்யா ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.