தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ஆதரவற்ற குழந்தைகளின் உடல்நலத்தை பாதுகாப்பதற்காக ப்ரத்யுஷா என்ற அறக்கட்டளையை தொடங்கி அதன் மூலம் பல உதவிகளை செய்து வருகிறார். அதை துவங்கியது எதற்காக? அது தனக்கு எந்த விதத்தில் உதவியாக இருக்கிறது என்பது குறித்து பேசி இருக்கிறார். 

  


அது பற்றி பேசிய சமந்தா,  “ நான் இதை செய்ய வேண்டும் என்பதை முன்பிருந்தே நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய கவனமெல்லாம் சினிமாவில் என்னை ஒரு நட்சத்திரமாக நிலைநிறுத்திக்கொள்வதிலேயே இருந்தது. ஒரு கட்டத்தில் இதை தொடங்கியே ஆக வேண்டும் என்று உறுதியெடுத்து தொடங்கினேன். அப்படித்தான் ப்ரத்யுஷா அறக்கட்டளை பிறந்தது. அப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.




ப்ரத்யுஷா அறக்கட்டளை எனக்கு தன்னபிக்கையையும், மனஅமைதியையும் தருகிறது. சாதரண வாழ்கையில் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி தற்காலிகமானது. ஆனால் இங்கு வரும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் முகத்தில் சிரிப்பை பார்க்கும் போது, அதில் கிடைக்கும் இன்பமானது வேறெங்கும் கிடைப்பதில்லை. உண்மையில் எனது அம்மாவிற்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும். காரணம் நாங்கள் அவ்வளவு கடினமான சூழ்நிலையில் இருந்த போதினும் கூட, அவர் மற்றவர்களுக்கு உதவி செய்தார். இங்கு 100க்கும் மேற்பட்ட பெண்கள் சினிமாவுக்கு வர முயற்சி செய்கிறார்கள்.


 






அதில் இருந்து 2, 3 பேருக்கு மட்டுமே சினிமா துறைக்குள் ஒரு பெரிய இடத்திற்கு வருவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் இதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால், இவையெல்லாம் உங்கள் ஒருவரால் மட்டுமே நடக்கிறது என்று நீங்கள் நினைத்தால் உங்களை போல முட்டாள் யாரும் கிடையாது. இதில் அதிஷ்டம், விதி என எல்லாம் அடங்கி இருக்கிறது.  இந்த இடத்தில் இருந்து கொண்டு நான் நிம்மதியாக தூங்கி எழுந்திருக்க வேண்டுமென்றால், நான் திரும்பி கொடுத்தாக வேண்டும். அதற்கான பதில்தான் ப்ரத்யுஷா அறக்கட்டளை என்று பேசியுள்ளார்.  


கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த சமந்தா இந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வர தொடங்கிவிட்டார். பாலிவுட் முதல் ஹாலிவுட் வரையில் சமந்தா அடுத்தடுத்து முன்னேற்றம் காண துவங்கியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமந்தா தனது கடின உழைப்பால் தனக்கான அங்கீரத்தை பெற துவங்கியிருக்கிறார்  என்பதில் சந்தேகமே இல்லை. தற்போது அவர் யசோதா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். விஜயின் 67 ஆவது படத்தில் வில்லியாக நடிக்கவும் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.