சமந்தா நாக சைதன்யா


தென் இந்திய திரையுலகில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஜோடிகளில் ஒன்று சமந்தா நாக சைதன்யா. காதலில் தொடங்கி திருமணம் வரை சென்ற இவர்களின் உறவு 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் தங்கள் திருமண உறவை முடித்துக்கொள்வதாக கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவித்தார்கள். விவாகரத்துப் பெற்று மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் சமந்தா சோலோவாக இருந்து வருகிறார். நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை ஷோபிதாவுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 


காதல் சின்னமாக மிச்சமிருக்கும் டேட்டூ


சமந்தா மற்றும் நாகசைதன்யாவுக்கு திருமணமானபோது இருவரும் தங்கள் உடலில் காதல் சின்னமாக பச்சைக்குத்திக் கொண்டார்கள். நாக சைதன்யா தனது வலது கையில் சமந்தாவுடன் திருமணமான நாளை டேட்டூவாக பதித்தார். அதேபோல் சமந்தா தனது இடுப்பில்  சைதன்யா என்கிற பெயரை சே என டேட்டூ போட்டுக்கொண்டார். திருமண விவாகரத்திற்குப் பின் இந்த டேட்டூவை என்ன செய்ய போகிறார்கள் என இருவரிடமும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு இருவரும் வெவ்வேறு பதில் தெரிவித்துள்ளார்கள்.


நாக சைதன்யா பதில்


தனது கையில் இருக்கும் டேட்டூவை மாற்றுவீர்களா என்று  நாக சைதன்யாவிடம் கேட்டபோது "அதைப் பற்றி நான் இன்னும் யோசிக்கவில்லை. அதில் மாற்றுவதற்கு எதுவும் இல்லை" என அவர் தெரிவித்தார்.


நாக சைதன்யா தற்போது சந்து மொடெத்தி இயக்கும்  தண்டேல் படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 


சமந்தா


சமந்தாவிடம் இதே கேள்வி எழுப்பப்பட்டபோது அந்த டேட்டூ போட்டுக்கொண்டதற்காக தான் வருத்தப்படுவதாக தெரிவித்தார் "இளம் வயது சமந்தாவிடம் நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்.. டேட்டூ மட்டும் போட்டுக்கொள்ளாதே" என்று சமந்தா ரசிகரின் கேள்விக்கு பதிலளித்தார்.


சமந்தா தற்போது சிட்டெடல் வெப் சீரிஸ் நடித்து வருகிறார். ராஜ் & டிகே இணைந்து இயக்கும் இத்தொடரில் வருன் தவான் நாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் இத்தொடரின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. 




மெலும் படிக்க : Prithviraj Sukumaran : மும்பையில் அடுக்குமாடி வீடு வாங்கிய நடிகர் பிருத்விராஜ்...விலை இத்தனை கோடியா!


Sasikumar : கடன் பிரச்சனையால் தான் நடிக்க வந்தேன்...தொடர்ந்து படங்கள் இயக்காதது குறித்து சசிகுமார்