நடிகர் நாக சைதன்யாவும் மற்றும் நடிகர் சமந்தா திருமண உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு அண்மையில் ரியாக்ட் செய்துள்ளார் சமந்தா. அண்மையில் ஃபிலிம் கம்பேனியன் மீடியாவுக்குப் பேட்டியளித்துள்ள அவர், ”எல்லா வதந்திக்கும் என்னால் ரியாக்ட் செய்துகொண்டிருக்க முடியாது. எனக்கு எப்போது எதற்கு பதில் அளிக்க வேண்டும் எனத் தோன்றுகிறதோ அதற்கு பதில் அளிப்பேன். இப்படித்தான் ஃபேமிலி மேன் - 2வில் நடித்தத்தற்கும் சோஷியல் மீடியாவில் 65000க்கும் மேற்பட்ட ரியாக்‌ஷன்ஸ் வந்திருந்தது. அதற்கு பதில் அளிக்கச் சொல்லி எல்லோரும் எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் அழுத்தத்தின் காரணமாக ரியாக்ட் செய்யும் நபர் நான் இல்லை. இரண்டும் இரண்டும் ஐந்து என்று நினைத்துக்கொள்கிறீர்களா நினைத்துக்கொள்ளுங்கள் என நான் விட்டுவிடுவேன்’ எனக் கூறியுள்ளார். 










அண்மையில் நடிகர் சமந்தா  தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா அக்கினேனி என இருந்த பெயரை வெறுமனே S என மாற்றினார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவரும் நாக சைதன்யாவும் பிரியப் போவதாக செய்திகள் வெளியாகின. மேலும் சமந்தாவுக்கு விவாகரத்துக்கான ஜீவனாம்சமாக சைதன்யா சமந்தாவுக்காக பண்ணை வீடு ஒன்றை கட்டிக்கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின. மற்றொருபக்கம் சமந்தா சகுந்தலம் என்கிற வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அதனால்தான் அவர் பெயரை மாற்றியுள்ளார் எனவும் அவரது ரசிகர்கள் கூறி வந்தனர். 


இதற்கிடையேதான் தற்போது ஃபிலிம் கம்பேனியன் ஊடகத்துக்குப் பேட்டியளித்திருந்தார் சமந்தா, அதில் ‘சைதன்யா எதற்கும் அமைதியாகவே இருப்பவர். பதற்றம் இருந்தாலும் அதற்கும் அமைதியாகத்தான் இருப்பார். ஆனால் நான் அப்படியில்லை. சைதன்யா நடிக்கும் படங்களுக்காக நான் பதற்றமடைவேன்’ எனக் கூறியுள்ளார்.  மேலும், தனது 11 வருட சினிமா வாழ்க்கை குறித்தும் பேசியுள்ள அவர், ‘இந்த 11 வருடங்களில் நான் சினிமாவிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டதே இல்லை. தற்போது எனக்கு அந்த ஒய்வு தேவையாக இருக்கிறது’ என்றும் சகுந்தலம் படத்துக்குப் பிறகு தான் சிறிதுகாலம் ஓய்வு எடுத்துக்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.