சமந்தா நடிப்பில் மட்டுமின்றி ஃபேஷனிலும் கலக்கும் நடிகை. அவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் இடுவது வழக்கம். சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் கில்லியான இவருக்கு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் வித்தை தெரியும். அது போன்று அவரை பற்றி பேசவைக்கும் புகைப்படங்களை வெளியிடுவது அவருக்கு கை வந்த கலை.



எல்லாவற்றையும் மீறி, அவருடைய மேக்கப் இல்லாத புகைப்படங்களுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. அப்படிப்பட்ட புகைப்படங்களில் அவர் மேலும் அழகாக தெரிவார். ரசிகர்கள் எப்போது அது போன்ற புதிய படங்கள் வரும் என்று காத்திருப்பார்கள்.


அது போல, இன்று காலை இன்ஸடாகிராமில் புதிய பதிவு ஒன்றை இட்டார். அதோடு சேர்த்து எல்லோருக்கும் பள்ளிக்கு போக துவங்கியது முதல் அறுபது வயதுவரை பின்தொடரும் திங்கட்கிழமை சோம்பேறித்தனங்களை களையும் மகிழ்வான மந்திரத்தையும் எழுதியிருந்தார். அவர் தான் உறங்கும் கட்டிலில் இருந்தபடி மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு கீழ், "உறக்கம் களைவது, சிறப்பாக மாறுவது, திரும்பவும் அதையே செய்வது" என்று எழுதியிருக்கிறார். இது அவரை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும் மந்திரம்போல் உள்ளது, இதை நாம் குறிப்பெடுத்துக்கொண்டு வாழ்வில் பின்பற்றவேண்டும் என்று பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.



சமந்தா மேக்கப் இல்லாத புகைப்படங்களை வெளியிடுவது இது முதன்முறையல்ல. அழகு சாதனங்கள் இல்லாமல் முகத்தை வெளியில் காட்டுவதற்கு பெயர் போனவர் சமந்தா. அவருடைய மின்னும் சருமம், அனைத்து பெண்களும் அடைய விரும்பும் சருமம் எனலாம். 




திரைப்படங்களை பொறுத்தவரையில், குணசேகர் எனும் தெலுங்கு இயக்குனர் எழுதி இயக்கிய புராண இதிகாச காதல் கதையான 'சகுந்தலம்' திரைப்படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் சமந்தா முடித்துள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கின் பிரபல கவிஞர் காளிதாஸ் எழுதிய அபிநாசகுந்தலம் என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. சமந்தா சகுந்தலாவாகவும், மலையாள நடிகர் தேவ் மோகன் துஷ்யந்தாவாகவும் நடிக்கிறார்கள். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படமான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் இப்போது நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார்.