தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி அவரை விவகாரத்து செய்தார். இந்த விவகாரத்தால் மனமுடைந்த சமந்தா தனது தோழியுடன் கேதார்நாத் உள்ளிட்ட பல இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றார். இவற்றுடன் முன்பை விட இன்னும் அதிகமாக தனது சினிமா கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.


தற்போது `சகுந்தலம்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படங்களில் நடித்து வரும் சமந்தா, நான்கு மொழிகளில் வெளியாகும்  ‘யசோதா’ படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். அதே போல சர்வதேச அளவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் `அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ படத்திலும் நடிக்க இருக்கிறார்.  `டவுண்டன் அப்பே’ தொடரை இயக்கி பிரபலமான ஃபிலிப் ஜான் இயக்கும் இந்தப்படத்தை இயக்குகிறார். அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் நாவலைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது.





இப்படி பல புதிய முயற்சிகளை எடுத்து வரும் சமந்தா, இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக, அயிட்டங் சாங்கில் நடிக்க ஒப்பந்தமாகினார். அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள  ‘புஷ்பா’ படத்தில் இந்த அயிட்டங் சாங்கில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடல் நாளை வெளியாக உள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இது தொடர்பான படப்பிடிப்பில் நடிகர் அல்லு அர்ஜூனும், நடிகை சமந்தாவும் ஆடியுள்ளனர். 






அண்மையில், விவகாரத்து குறித்து பேசியிருந்த சமந்தா, “ எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது என்னுடைய மனவலிமையை நினைத்து ஆச்சரியப்படுகிறேன். மனதளவில் நான் மிகவும் பலவீனமானவள். நாக சைதன்யாவுடனான பிரிவுக்கு பிறகு மனம் நொறுங்கி இறந்து விடுவேன் என நினைத்தேன். ஆனால் இவ்வளவு வலிமையாக இருப்பேன் என்று நினைக்க வில்லை” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண