நடிகை சாய் பல்லவியின் அடுத்த திரைப்படமான கார்கி வருகிற ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த தகவலை சாய் பல்லவி இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகிர்ந்துள்ளார். இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் பேனரில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.


இந்தநிலையில், கார்கி திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண் ஒருவர், ஒட்டுமொத்த சமூகத்திற்கு எதிராக தனது தந்தைக்காக போராடும் கதை. இதனால் தனக்கு நேர்ந்த அவமானங்கள், சோகங்களை கடந்து எப்படி அவற்றில் இருந்து வெற்றி பெறுகிறார் என்பதை இந்த கதை ஆழமாக சொல்ல இருக்கிறது. 






இந்நிலையில் இன்று ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சாய்பல்லவி சூர்யா, ஜோதிகா குறித்து பேசினார். அதில், மேடையில் பேசிவிட்டுச் சென்ற சாய்பல்லவி திரும்ப வந்து சூர்யா குறித்து பேசினார். அதில்,   நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். சூர்யா குறித்து பேசாமல் போய்விட்டேன். இந்த படத்துக்கு அவர் பங்களிப்பு அதிகம்.சின்ன பிரஸ்மீட் என்று என்னை கூட்டிட்டு போனாங்க.  அது சூர்யாவின் வீடு என எனக்கு தெரியாது. என் பின்னால் வந்து ஜோதிகா சர்ப்ரைஸ் கொடுத்தார். அவரைப் பார்த்ததும் நான் ஷாக் ஆகிட்டேன்.  அவங்களுக்குக் சரியாகக் கூட நன்றி சொல்லல. போட்டோவில் கூட சிரிச்சேனானு தெரியல. சூரரைப் போற்று, ஜெய்பீம் மாதிரி படத்துல நடிச்சுட்டும், கார்கி மாதிரியான வித்தியாசமான படங்களுக்கும் சூர்யா கொடுக்கும் பங்களிப்பு மிகப்பெரியது என்றார்.