Just In





டாக்டரின் காலில் விழுந்து அழுத கார்த்திக்; குழந்தையை கையில் ஏந்தி ஆனந்த கண்ணீர் வடித்த ரோபோ ஷங்கர் குடும்பம்!
குழந்தையின் முகத்தை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்த ரோபோ சங்கரின் மருமகனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் நடிகர் ரோபோ சங்கரும் ஒருவர். சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், பெரியளவிற்கு வாய்ப்புகள் இல்லை. எனினும், விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். எப்படி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ரோபோ சங்கர் பிரபலமோ அந்தளவிற்கு சர்ச்சைக்கும் பெயர் போனவர் தான். சில மேடைகளில் தானாக வாயை விட்டு சிக்கி உள்ளார். ஹன்சிகா காலை தடவ கடைசி வரை அவங்க அனுமதி கொடுக்க வில்லை என பேசியது... அதிக விமர்சனங்களுக்கு ஆளானது.
ஒரு கட்டத்தில் ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு... மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றார். அப்போது அவரின் மனைவி தான் அவரை பழைய நிலைக்கு கொண்டு வந்தார். இதையடுத்து இந்திரஜாவிற்கு திருமணமும் நடைபெற்றது. ரோபோ சங்கரின் மனைவியின் தம்பி கார்த்திக்கை தான் இந்திரஜாவிற்கு திருமணம் செய்து வைத்தனர். சொந்த தம்பி இல்லை என்றாலும், மிகவும் நெருங்கிய குடும்ப நண்பர் என கூறப்பட்டது.
இந்திரஜா - கார்த்தி திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக கடந்த ஆண்டு நடந்தது. திருமணத்திற்கு பிறகு இருவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால், இன்ட்ராஜா கர்ப்பமாக இருந்த நிலையில், அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகினர். அதன் பிறகு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சின்னத்திரையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தான் இந்திராஜாவிற்கு கடந்த 20ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
இந்த செய்தியை இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தற்போது இந்திராஜாவின் கணவர் கார்த்திக் தனது இன்ஸ்டா பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவரின் காலில் தொட்டு வணங்கிய கார்த்திக், தனது குழந்தையை பார்த்த சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் சிந்தினார். அவர் மட்டுமின்றி ரோபோ சங்கரின் மனைவியும் கண்ணீர் சிந்திய காட்சிகள் அந்த குழந்தைக்காக அவர்களின் காத்திருப்பை உணர்த்தும் விதத்தில் இருந்தது. உணர்வு பூர்வமான இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.