நடிகர் ரவி மோகன் தனது வீட்டில் பணியாற்றிய பணிப்பெண் பணம் மற்றும் நகை திருட்டில் ஈடுபட்டதாக கூறி பணிப்பெண்னை சிறைபிடித்து வைத்ததாக புகார் எழுந்துள்ளது. நகை திருட்டு குறித்து காவல்துறையில் முறையாக புகாரளிக்கும்படி ரவி மோகன் தரப்பிடம் போலீசார் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்து ரசிகர்களிடையே நல்ல மதிப்பை சம்பாதித்து வைத்தவர் நடிகர் ரவி மோகன். ஆனால் சமீப காலத்தில்  குடும்ப பிரச்சனைகள் காரணமாக தொடர் சர்ச்சையில் ரவி மோகனின் பெயர் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரவி மோகன் அழுதபடி தனது மனைவி ஆர்த்தியின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அவரது விவாகரத்து வழக்கு தற்போது சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ரவி மோகன் தனது வீட்டில் வேலைப் பார்த்து வந்த இரு பணிப்பெண்கள் மற்றும் அவரது மகனை சிறைபிடித்து வைத்திருந்ததாக புகார் எழுந்துள்ளது

பணிப்பெண்களை சிறைபிடித்து வைத்த ரவி மோகன்

சென்னை நீலாங்கரையில் நடிகர் ரவி மோகனின் வீடு உள்ளது. இந்த வீட்டில் பணிபுரிந்து வந்த பணிப்பென் நகை மற்றும் பண திருட்டில் ஈடுபட்டதாக கூறி ரவி மோகன் அவர்களை சிறைபிடித்து வைத்துள்ளார். பணிபெண் வீடு திரும்பாததால் அவரது கணவர் ரவி மோகன் வீட்டிற்கு சென்று கேட்டபோது பணிப்பெண்ணை தனது கண்காணிப்பில் வைத்திருந்த ரவி மோகன் அவரை திருப்பி அனுப்ப மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பணிப்பெண்ணின் கணவர் நீலாங்கரையில் உள்ள காவல்  நிலையத்தில் புகாரளித்ததாகவும் காவல் அதிகாரிகள் ரவி மோகன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது இரண்டு பணிப்பெண்கள் மற்றும் அவரது மகன் ரவி மோகன் சிறைபிடித்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. நகை திருட்டு குறித்து முறையாக காவல் துறையில் புகாரளிக்கும்படியும் சட்டவிரோதமாக பணிப்பெண்களை தனது வீட்டில் சிறைபிடித்து வைத்திருப்பது தவறு என்றும் காவல் துறையினர் ரவி மோகனுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பணிப்பெண்கள் தரப்பில் இருந்து புகாரளிக்கப்பட்டால் ரவி மோகன் மீது நடவடிக்க எடுக்கவும் வாய்ப்பிருப்பதாக காவல் துறை சார்பாக ரவி மோகனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement