தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக திகழும் ராஷ்மிகா மந்தனாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தனது அழகான சிரிப்பாலும் வசீகரமான தோற்றத்தாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 


சமீபத்தில் நடிகர் விஜய் ஜோடியாக 'வாரிசு' திரைப்படத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா. தமிழில் அறிமுகமான இரண்டாவது திரைப்படத்திலேயே விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அவரை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியது. அதனை தொடர்ந்து பாலிவுட்டில் அவர் நடித்த அனிமல் மற்றும் மிஷன் மஜ்னு திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 



 


சாமி சாமி பாட்டுக்கு டான்ஸ் :     


தற்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா : தி ரூல் திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா திங்களன்று ட்விட்டர் மூலம் ரசிகர்களிடம் 'என்னிடம் எதையும் கேளுங்கள்' சிட்டிங் மூலம் கலந்துரையாடினார். ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அந்த சமயத்தில் ரசிகர் ஒருவர் நான் உங்களுடன் புஷ்பா படத்தின் பிரபலமான பாடலான 'சாமி சாமி...' பாடலுக்கு நடனமாட வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார். அதற்கு பதிலளித்த ராஷ்மிகா 'பல முறை நான் இந்த பாடலுக்கு நடனமாடி விட்டேன். எனது வயதான காலத்தில் நிச்சயம் என்னுடைய முதுகுத்தண்டில் பிரச்சனைகள் வரும் என நான் உணரும் அளவிற்கு நான் இந்த பாடலுக்கு நடனமாடிவிட்டேன். இதை ஏன் எனக்கு தர வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். நாம் சந்திக்கும் போது வேறு ஏதாவது செய்யலாம் என்றார். 


விஜய்யுடன் மீண்டும் இணைகிறாரா? 



மேலும் நடிகை ராஷ்மிகா பதில் அளிக்கையில் மற்றுமொரு முறை நடிகர் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை வெளிப்படுத்துவதாக கூறினார். தனது செல்ல பிராணி நாய் குட்டியை எந்த அளவுக்கு மிஸ் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் " தற்போது மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருப்பதால் நான் அவளை ரொம்பவும் மிஸ் பண்றேன்" என கூறியிருந்தார். 


மனம் வருந்திய ராஷ்மிகா : 


வெற்றியும் புகழும் இருந்த போதிலும் அதையெல்லாம் விட்டுவிடுவது போல் எப்போதாவது உணர்ந்து உள்ளீர்களா என்று கேள்விக்கு மிகவும் வெளிப்படையாக 'சில சமயங்களில்' அதை நான் உணர்ந்துள்ளேன் என மனம் திறந்தார் ராஷ்மிகா. தன்னை ட்ரோல் செய்பவர்கள் பற்றி பேசுகையில் " நான் என் வாழ்க்கையில் எது செய்தாலும் அது அனைத்திலும் ஏதாவது ஒரு பிரச்சனை இருப்பதாக கூறுகிறார்கள். என்னை பற்றி கேலி செய்யும் போது மனதளவில் அது என்னை மிகவும் பாதிக்கிறது. என் தோற்றத்தில் கூட மக்கள் ஏதாவது ஒரு குறையை காணுகிறார்கள். நான் அதிகம் வேலை செய்தால் ஒரு ஆண்போல இருப்பதாக கூறுகிறார்கள், வேலை செய்யவில்லை என்றால் கொழுப்பு அதிகம் என்கிறார்கள். பேசினால் திமிரு பேசவில்லை என்றால் உம்முன்னாமூஞ்சி என்கிறார்கள். இப்படி நான் எது செய்தாலும் அதில் ஒரு தவறை கண்டுபிடிக்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்? நான் வெளியேற வேண்டுமா? அல்லது நீடிக்க வேண்டுமா?" என மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்தார்.