மலையாள சினிமாவில் மாஸ் நடிகராக வளர்ந்துக்கொண்டிருக்கிறார் நடிகர் துல்கர் சல்மான். தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி , கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இங்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் டோலிவுட்டிலும் நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபல இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் துல்கர் தற்போது நடித்து வருகிறார். தற்போது  Production no 7 என அழைக்கப்படும் இந்த படத்தில்  லெப்டினன்ட் ராம் என்ற ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் மிருணல் துல்கர் சல்மானிற்கு ஹீரோயினாக ஒப்பந்தாமாகியுள்ளார். இவர் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். துல்கரின் பிறந்த நாளை முன்னிட்டு , அவருக்கே தெரியாமல் ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு துல்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர். அதே போல நடிகை மிருணளின் பிறந்தநாளை முன்னிட்டு மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டு , அவருக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அந்த போஸ்டரில் நடிகர் துல்கர் , கண்ணாடியின் முன்னால் நிற்கும் மிருணளை புகைப்படம் எடுப்பது போலவும் அதனை அவர் ஷாக்கிங்காக பார்ப்பது போலவும் காட்சி இடம்பெற்றிருந்தது.










 


இந்நிலையில் டோலிவுட்டின் முன்னணி நாயகி ராஷ்மிகா மந்தனாவும் இந்த படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. அவரின் கதாபாத்திரம் கதைக்கு மிகவும் முக்கியமானது என்றும்,அழுத்தமாக ரசிகர்கள் மனதில் பதியும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக ரேஷ்மிகாவைத்தான் சீதா கதாபாத்திரத்திற்காக அனுகியுள்ளனர் படக்குழு. ஆனால் பிஸியாக நடித்துவரும் ராஷ்மிகாவிற்கு கால்ஷூட் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில்தான் மீண்டும் படத்தின் இணைதுள்ளாராம் ராஷ்மிகா. அவரின் கதாபாத்திரம் குறித்த போஸ்டரும் அடுத்ததாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புரடக்‌ஷன் நம்பர் 7 படத்தை   ஸ்வப்னா சினிமாஸ் தாயரித்து வருகிறது. துல்கர் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மகாநதி’ படத்தை தயாரித்த நிறுவனம்தான் ஸ்வப்னா சினிமாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. படம் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக உள்ளது . படத்திற்கு  விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.