குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமான நடிகையாக வளர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இந்த நடிகை எக்ஸ்பிரஷன் குயின் என கொண்டாடப்படுகிறார். இப்படி ஒரு புறம் இளைஞர்களின் க்ரஷாக இருந்து வந்தாலும் நாளுக்கு நாள் அவரை வெறுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது. 




விஜய் கூட நடிச்சா போதும் :


சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்தார். இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவான இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகி உலகளவில் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் ராஷ்மிகாவின் பெரிய அளவில் இல்லை என்றாலும் அவர் நடிகர் விஜய் தீவிர ரசிகர் என்ற ஒரே காரணத்தால் இப்படத்தில் நடிக்க ஒப்புதல் அளித்துள்ளார். இதை அவரே சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். 






ட்ரோலில் சிக்கி தவிப்பு :
 
எந்த அளவிற்கு ரசிகர்கள் ராஷ்மிகாவின் அழகு, நடிப்பு, எக்ஸ்பிரஷன் என அனைத்தையும் ஒரு புறம் ரசிகர்கள் புகழ்ந்து வந்தாலும் மறுபுறம்  அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள் ஹேட்டர்ஸ். சமீப காலமாக ராஷ்மிகாவை சோசியல் மீடியாவில் நெகடிவ் கமெண்ட், ட்ரோல் மூலம் பயங்கரமாக தாக்கி வருகிறார்கள். அவர் எது பேசினாலும் அதை ஒரு பெரிய சர்ச்சையாக்கி பூதாகரமாக பரப்பி வருகிறார்கள். இதனால் மிகவும் மன உளைச்சலில் இருக்கும் ராஷ்மிகா சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் மிகவும் மனம் உடைந்து பேசியுள்ளார். 






 


"என்ன காரணம் என்று தெரியவில்லை. மக்கள் நான் எது செய்தாலும் வெறுக்கிறார்கள். நான் ஒர்க் அவுட் செய்தால் ஆண் போல இருப்பதாக ட்ரோல் செய்கிறார்கள். அப்படி செய்யாவிடில் எடை கூடி குண்டாக இருப்பதாக கூறுகிறார்கள். பேசாமல் இருந்தால் திமிரு என்கிறார்கள் பேசினால் கிரிஞ்ச் என்கிறார்கள். நான் மூச்சு விட்டாலும் பிரச்சனை மூச்சு விடவில்லை என்றாலும் பிரச்சனை. நான் என்னதான் செய்வது என தெரியவில்லை. சில சமயங்களில் நான் சினிமாவை விட்டு விலகிவிட வேண்டுமா என கூட தோன்றியுள்ளது. " என மிகவும் மனவேதனையில் குமுறியுள்ளார் ராஷ்மிகா. 
.