நடிகர் ரன்வீர் சிங், தனது நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மும்பை காவல்துறையால் இந்த மாத இறுதியில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். 37 வயதான ரன்வீர் சிங், ஆகஸ்ட் 22 ஆம் தேதி செம்பூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக செல்ல உள்ளார்.


 






செம்பூர் காவல்துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ரன்வீர் சிங்கின் வீட்டிற்குச் சென்று விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அளித்துள்ளனர். ஆனால் அவர் மும்பையில் இல்லை என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செம்பரை அரசு சாரா அமைப்பு அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களின் உணர்வுகளை ரன்வீர் சிங் புண்படுத்தியதாகவும், சமூக ஊடக தளங்களில் தனது நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் அவமதித்ததாகவும் அரசு சாரா அமைப்பு குற்றம் சாட்டியது.


 






கடந்த மாதத்தின் பிற்பகுதியில், பேப்பர் பத்திரிகை வெளியிட்ட நடிகரின் நிர்வாண புகைப்படத்தால் இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 1972 ஆம் ஆண்டு காஸ்மோபாலிட்டன் பத்திரிகையின் படப்பிடிப்புக்கு நிர்வாணமாகச் சென்ற 70களின் பாப் ஐகான் பர்ட் ரெனால்ட்ஸுக்கு இந்த போட்டோஷூட்டின் மூலம் ரன்வீர் அஞ்சலி செலுத்தினார்.


அலியா பட் உடன் கரண் ஜோஹரின் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி திரைப்படத்தில் ரன்வீர் சிங் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே, ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் வருண் ஷர்மா ஆகியோருடன் இணைந்து நடிக்கும் ரோஹித் ஷெட்டியின் சர்க்கஸ் படத்திலும் அவர் நடத்துள்ளார்.


இதனிடையே  நடிகர் விஷ்ணு விஷாலும் தனது மனைவி எடுத்த நிர்வாண போட்டோவை பகிர்ந்தார். இதனை பலரும் கவனம் ஈர்ப்பதற்காக இவ்வாறு செய்திருக்கிறார் என்று விமர்சனங்களை அடுக்கிய நிலையில், தற்போது அவர் விளக்கம் கொடுத்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண