உலக அளவில் மக்கள் தற்போது படங்களில் கவனம் செலுத்தும் நேரத்தை விட வெப் சீரிஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். 

 

அந்த வகையில் உலக மக்கள் அனைவருக்கும் பிடித்தமான தொடர் மணி ஹெய்ஸ்ட். ஏற்கனவே நான்கு சீசன் வெளியாகி வரவேற்பை பெற்றது. சரி அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மணி ஹெய்ஸ்ட் தொடரில் என்பதை பார்ப்போம். புரபசர் தலைமையில் பணம் திருடுவது கதை. இதை கேட்டவர்கள் என்னது வெறும் பணத்தை திருடுவதற்காகவா இந்த தொடர் கொண்டாடப்பட்டு வருகிறது என கேட்கலாம் . இவர்கள் திருடும் இடம் சாதாரணமானது இல்லை, பணம் அச்சிடும் இடம். மிகவும் பாதுகாப்பு பொருந்திய கட்டங்களில் இவர்கள் எப்படி திருடுகிறார்கள் என்பதே கதையாகும். 

 





கடைசியாக வெளியான நான்காவது தொடரில், நைரோபி யாரும் எதிர்பார்க்காத நிலையில் உயிரிழந்தார். மிகவும் முக்கியமான கதாபாத்திரம் இறந்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. 

 

இந்நிலையில் நான்கு பகுதிகள் முடிந்த நிலையில், ஐந்தாவது பகுதி தற்போது வெளியாக உள்ளது. இது தொடர்பான புரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. வழக்கம் போல் விறுவிறுப்பு பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகிறது. மேலும் அந்த டீஸரில் always fight never surrender என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இத்தொடர் வெளியாக உள்ளது.

 

செப்டம்பர் 3-ஆம் தேதி ஐந்தாவது சீசனின் வெளியாக உள்ளதாக மணி ஹெய்ஸ்ட்.  தொடர் குழுவினர் தெரிவித்து உள்ளனர். இந்த தொடர் வெளியாக இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் புரோமோஷன் செய்யும் பணியில் மணி ஹெய்ஸ்ட் குழு இடம்பெற்றுள்ளன. மிகுந்த எதிர்பார்பில் இருக்கும் ராணா டகுபதி இதுதொடர்பாக புரோமொட் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார். அதேபோல் அனில் கபூர், ராதிகா ஆப்தே மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர்  இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு உள்ளனர். இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இந்தத் தொடர் வெளியாக உள்ளது.