தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அட்லி இருந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்பு நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப்படங்களை இயக்கினார். தற்போது ஷாருக்கானை வைத்து அட்லீ ஜவான் படத்தை இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. சமீபத்தில் சூப்பர் ஹிட்டை ருசிக்காத ஷாருக் அட்லியின் ஜவான் படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதேபோல் ஷாருக்கின் ரசிகர்களும் இப்படத்துக்காக காத்திருக்கின்றனர்.


 






சென்னையில் நடைபெற்று வந்த ஷாருக்கான் -அட்லி கூட்டணியில் உருவாகிவரும் ஜவான் படத்தின் சூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. இதில் விஜய் சேதுபதி, ஷாருக்கின் நேரடி காட்சிகள் படமாக்கப்பட்டன.


இதனை தொடர்ந்து சென்னையை விட்டு கிளம்புவதற்கு முன்னதாக நடிகர் விஜய்யை அவருடைய சூட்டிங் ஸ்பாட்டில் நேரில் சென்று ஷாருக்கான் மற்றும் அட்லி சந்தித்துள்ளனர்.


 






இதை தொடர்ந்து ஜவான் படபிடிப்பு இடத்திற்கு நேரில் சென்றுள்ளார் ரஜினி, இந்த தருணங்களை நெட் பிலிக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளது. '' ஷாருக்கான் படமான ஜவான் திரைப்பட செட்டை தலைவர் பார்வையிட்டார். நயன் தாரா நடித்த போர்ஷனை அனிருத்துடன் சேர்ந்து பார்த்தார். விஜய் சேதுபதியுடன் மற்றும் விஜய்யுடன் முக்கியமாக கலந்துரையாடினார். இயக்குநர் அட்லிக்கும் அவரது மனைவி ப்ரியாவுக்கும் நன்றி. நான் சிக்கன் 65 செய்வது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும்’’ என ஷாருக்கான் கூறியதாக நெட்பெலிக்ஸ் சார்பாக அதன் டுவிட்டர் பக்கத்தில் இந்த ஜவான் படத்தின் ஷூட்டிங் போது நடந்த கலகலப்பான மற்றும் மகிழ்ச்சியான  தருணங்களை பதிவிட்டுள்ளது.