அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா படம் அல்லுவின் ஸ்டைல், ராஷ்மிகாவின் க்ளாமர், சமந்தாவின் ஓ அன்ட்டாவா குத்துப் பாடல் எனப் பல விஷயங்களால் பிரபலமானது. ஆனால் அல்லு அர்ஜூன் தாடியை கோதும் ஸ்டைலும், தோளைத் தூக்கி நடக்கும் ஸ்டைலும் கடல் கடந்து ரசிகர்களைப் பெற்றுவிட்டது. பேன் இந்தியா திரைப்படம், பிரம்மாண்ட கதையம்சம், ஊ சொல்றியா பாடல் என பல எதிர்பார்ப்புகளுடன் புஷ்பா வெளியானது.





 ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அந்த அளவுக்கு படம் பூர்த்தி செய்யவில்லை. இதற்கிடையே படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கிவிட்டது படக்குழு. முதல் பாகம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை என்பதால் இரண்டாம் பாகத்தை வெறித்தனமாக எடுத்துவிட வேண்டுமென படக்குழு மெனக்கெட்டு வருகிறது. 


இப்படி ஒருபுறம் படக்குழு தீவிரமாக இருக்கும் நிலையில் மறுபக்கம் படம் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அப்படி ஒரு தகவல்தான் தற்போது வெளியாகியுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி புஷ்பா 2ல்நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புஷ்பா  முதல்பாகத்திலேயே விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்ததாகவும் ஒருசில காரணங்களால் அது நடக்காமல் போனதாகவும் கூறப்படுகிறது. முதல்பாகத்தில் அல்லு அர்ஜூன், பகத் மல்லுக்கட்டிய நிலையில் இரண்டாம் பாகத்திலும் பகத்தின் பாகங்கள் அதிகம் இருக்குமென தெரிகிறது. அதேவேளையில் சீனியர் போலீஸாராக முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. 






முன்னதாக, இரண்டாம் பாகத்தில் ராஷ்மிகா ஏற்று நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் முடிவுக்கு வருவதாகவும், ராஷ்மிகா இறப்பதுதான் கதையின் போக்கு எனவும் கூறப்பட்டது. ராஷ்மிகாவின் காட்சிகள் கதையின் வேகத்தை குறைக்கும் என்பதாலும், அதன்படி ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தை குறைக்கும் விதமாகவே இந்த ட்விஸ்டை இயக்குநர் கையில் எடுத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இப்படியான தகவலை படத்தின் தயாரிப்பாளர் மறுத்தார். இந்நிலையில்தான் தற்போது விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.