Actor Vijay: 'டிக்கெட் விலையை குறைக்க முடியல.. அரசியலுக்கு வந்து என்ன பண்ணப் போறீங்க?’ - விஜய்யை விமர்சித்த தயாரிப்பாளர் கே.ராஜன்

கடத்தல் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

கடத்தல் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

கடத்தல் படம் 

கரண், வடிவேலு, நடித்த 'காத்தவராயன்', கதிர், ஹனி ரோஸ் நடித்த ‘காந்தர்வன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சலங்கை துரை அடுத்ததாக உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ‘கடத்தல்’ படத்தை எடுத்துள்ளார். இதில் ஹீரோவாக எம்.ஆர்.தாமோதர் அறிமுகமாகும் நிலையில், ஹீரோயின்களாக விதிஷா, ரியா ஆகியோர் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சுதா, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தமிழ்வாணன், ஆர்.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாசலம், க.சபாபதி, சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் என பல நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. 

இதில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்தார். அவர் தனது உரையில், “கடத்தல் படத்தை வாழ்த்த வந்திருக்கிற அனைவருக்கும் வணக்கம். இந்த படம் நல்ல வெற்றிப்படமாக அமைய வேண்டும். இதற்கு இறைவன் அருள் இருப்பதை விட, மக்களின் ஆசி இருக்க வேண்டும். அவர்கள் தியேட்டர்களை நோக்கி வர வேண்டும். படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது ஒரு ஈர்ப்பு சக்தி இருந்தது. அதனால் இப்படம் வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது” என கூறினார். 

நாம் எல்லாம் சாதிக்க பிறந்தவர்கள்

மேலும், ”நாம் எல்லாம் சாதிக்க பிறந்தவர்கள். நமக்கு எந்த பேதமும் வேண்டாம். இயக்குநர் பேரரசு பேசும்போது, சாதிய பிரச்சினைப் பற்றி பேசினார். சாதி உறவை வீட்டுக்குள் வைத்துக் கொள்வோம். வெளியே தமிழனாய் வாழ்வோம், இந்தியனாய் வளர்வோம். ஏதோ சில இயக்குநர்கள் அவர்களுக்கு ஏற்பட்ட வலி, அவர்கள் சார்ந்த சமுதாயம் பட்ட பாட்டை ஒரு கோணத்தில் சொல்கிறார்கள். பேரரசு குறிப்பிடும் போது, ‘உங்கள் வலியை சொல்லுங்கள். ஆனால் மற்றவர்களுக்கு வலிக்கிற மாதிரி சொல்லாதீர்கள்’ என சொன்னார். என்னைப் பொறுத்தவரை, சாதிய பிரச்சினை கொடுமைகளில்  யாரும் கஷ்டப்படவில்லை என நான் சொல்லவில்லை. ஆனால் சுதந்திரம் அடைந்ததில் இருந்து எவ்வளவோ முன்னேறி விட்டோம். நாடு ரொம்ப முன்னேறி விட்டது. 

இன்னும் 20 முதல் 30% மக்கள் அடிமையாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் முன்னேறி வர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பின் தங்கிய மக்களுக்கு ஏராளமான சலுகைகள் தருகிறார்கள். அவர்கள் சமுதாயம் சார்ந்த தலைவர்கள், படிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

விஜய்யின் அரசியல் குறித்து கருத்து

"சினிமா, சினிமா தியேட்டர்கள் மட்டும் தான் சாதியைப் பார்ப்பதில்லை. டிக்கெட் பணத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஏழை மக்களுக்கு உதவி செய்வோம் என சொல்கிறார்கள். ஆனால் உங்கள் படத்துக்கு  ரூ.1000க்கு டிக்கெட் விற்கிறார்கள். அரசு நிர்ணயித்த விலையை விற்க சொல்லுங்க. அதைவிட்டு விட்டு அரசியலில் வந்து என்ன பண்ணப் போகிறீர்கள்.  அதிக விலைக்கு டிக்கெட் விற்பதையே தடுக்க முடியல. பின்ன எதுக்கு ஓட்டுக்கு பணம் வாங்காதீங்கன்னு சொல்றீங்க. விஜய் நடிப்பை விட்டு அரசியலுக்கு போறதா சொல்றாங்க. பெரிய வயசு இல்ல, அதனாலே அவர் இன்னும் நடிக்க வேண்டும். விஜய் அவர் அரசியலில் இருக்க வேண்டுமா என்று மக்கள் சொல்லட்டும்” தயாரிப்பாளர் கே.ராஜன் கூறினார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola