இந்து மதம் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்ததாக பிரபல பாடகரும், நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவருமான நிக் ஜோனஸ் மனம் திறந்து பேசியுள்ளார். அவரின் கருத்துக்கு இணையவாசிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

Continues below advertisement

ஹாலிவுட்டின் பிரபல பாடகரான நிக் ஜோனஸூம், நடிகை பிரியங்கா சோப்ராவும் கடந்த 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். நிக்கை விட பிரியங்கா சோப்ரா 10 வயது மூத்தவர் என்ற நிலையில் இவர்கள் மகிழ்ச்சியான தம்பதியினராக வலம் வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2022ம் ஆண்டு மால்டி மேரி என்ற மகள் பிறந்தார். அமெரிக்காவில் வசித்தாலும் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதியினர் தொடர்ச்சியாக இந்திய பண்டிகைகளையும் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி தீபாவளி, ஹோலி பண்டிகைகளை கொண்டாடும் புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. 

இந்த நிலையில் நேர்காணலில் ஒன்றில் பேசிய நிக் ஜோனஸ், இந்தியாவின் மரபுகளைகளையும், சடங்குகளையும் நேரடியாக அனுபவிப்பதால் தான் என்னென்ன மாற்றங்களை அனுபவித்தேன் என்றும், இதனால் தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, “நான் முதன்முறையாக இந்தியா வந்தபோது பிரியங்கா சோப்ராவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டேன். அன்று முதலே இந்தியாவுக்கும் எனக்குமான பிணைப்பு தொடங்கி விட்டது. இந்த காலக்கட்டம் பிரியங்காவின் கலாச்சாரத்தை அர்த்தமுள்ள முறையில் அனுபவிக்கவும், அது ஒரு மாயஜால நிகழ்வாகவும் இருந்தது. உண்மையில் வாழ்க்கையில் எனக்கு பிடித்த சில நினைவுகள் இந்தியாவைச் சார்ந்தவையாக உள்ளது. இது என்னால் நம்ப முடியாத ஒன்று” என தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இந்து மதத்தின் மீது எனக்கு ஆழ்ந்த பிணைப்பு ஏற்பட்டுள்ளது. அது மிகவும் அழகானது. இந்து மதத்தைப் பற்றி நான் நிறைய கற்றுக்கொண்டேன். இது மிகவும் ஆச்சரியமளிக்கிறது. இந்து மத்தில் சொல்லப்படும் கர்மாவின் நடைமுறை கோட்பாடு என்னை நிறைய பாதித்துள்ளது. நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால் அது நமக்கு திரும்பி வரும்,கெட்டது செய்தால் கெட்டது நடக்கும் என்ற கோட்பாடு மிகவும் பிடிக்கும். இந்திய பண்டிகைகளும் மரபுகளும் இப்போது நம் வீட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது. நாங்கள் எங்களின் மகள் மால்டி மேரியை உண்மையான இந்து மதத்தின் நடைமுறைகளுடன் வளர்க்கிறோம். அதன் அர்த்தத்தை அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறோம். இந்த பன்முக கலாச்சாரத்தை கொண்ட குடும்பத்தைக் கண்டுபிடித்தது என் அதிர்ஷ்டம்” என நிக் ஜோனஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்த பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் வாரணாசி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.