அய்யோ.. நடிகை ப்ரியங்கா சோப்ராவிற்கு என்ன ஆயிருச்சு என ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு முகத்தில் ரத்தம் சொட்டக்கூடிய அவரது புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


உலக அழகியாக கடந்த 2000 ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த ப்ரியங்கா சோப்ரா. பாலிவுட்டினைத்தொடர்து ஹாலிவுட்டிலும் நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய ப்ரியங்கா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்திரையுலகிலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகினார். இப்படி பிஸியாக இருந்தப்போது தான் இவருக்கு கடந்த 2018 ஆண்டு அமெரிக்க பாடகருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் தன்னுடைய திருமணத்திற்கும் பிறகும் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில்  நடித்து வருகிறார்.





தற்போது லண்டனில் சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கக்கூடியவர். இந்நிலையில் தான் சமூக வலைத்தளத்தில் அவரது புருவத்தில் வெட்டு பட்டு ரத்தம் சொட்ட சொட்ட இருந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோடு பிரியங்காவின் கன்னத்தில் காயம் மற்றும் காதில் சேரும் சகதியாக ஒட்டியிருந்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து  ரசிகர்களிடம் 'எது உண்மை, எது இல்லை?' என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.


இதனைக்கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததோடு இது உண்மையா,? என கேள்வியும் எழுப்பியுள்ளனர். மேலும் இது உண்மையான காயம் இல்லை  எனவும், இது போட்டோஷூட் தான் என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.  இதற்கு பதிலளித்த ப்ரியங்கா. நீங்கள் கூறிய தகவல் உண்மையில்லை எனவும், காயம்பட்டது உண்மைதான் என பதிலளித்துள்ளார். ஆனால் புருவத்தில் வெட்டுபடவில்லை எனவும், கன்னத்தில் பட்ட காயம் உண்மைதான் எனவும் ரசிகர்களுக்கு பதிலளித்திருந்தார்.






 தற்போது லண்டனில் தனது முதல் வெப்சீரிஸான சிட்டாடல் படப்பிடிப்பிற்காக முகாமிட்டுள்ளார் ப்ரியங்கா சோப்ரா.  இதில் பரியங்காவுடனான ஆக்ஷன் காட்சிகளில் வெப் சீரிஸில் பிரபல நடிகர்களான ரிச்சர்ட் மேடன் மற்றும் பெட்ரோ லியாண்ட்ரோ ஆகியோரும் நடிக்கின்றனர். மேலும் வெப் சீரிஸ் தொடர்பான பல்வேறு போட்டோக்கள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.