பிரணிதா சுபாஷ் :


தமிழ் , தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரணிதா சுபாஷ் .தமிழில் மாசு, சகுனி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.இவர் கடந்த ஆண்டு மே மாதம் தொழிலதிபர் நிதின் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் திரைப்படங்களில் எதுவும் நடிக்கவில்லை. இந்த தம்பதிகளுக்கு  சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. பிரதாணி சுபாஷ் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவானவர் . சமீபத்தில் இவர் தனது கணவருடன் இருந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் அது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.







பெண் அடிமைத்தனமா ?


பிரணிதா ஜூலை 28 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ பீமனா அம்மாவாசை “ என்ற தலைப்பில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.. பீமனா அமாவாசை என்பது   பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ள பிற ஆண்கள்  நீண்ட  ஆயுளுடன் இருக்க வேண்டும் என பிராத்தனை செய்யும் ஒரு சடங்கு என கூறப்படுகிறது . இந்த சடங்கு சமயத்தில் பெண்கள் ஆண்களின் அதாவது கணவனின் பாததிற்கு பூஜை செய்வார்களாம். அப்படியான புகைப்படத்தைதான் பிரணிதா பகிர்ந்திருந்தார். அதில் கணவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரது பாதங்கள் தாம்பூழத்தில் வைக்கப்பட்டு , பூக்கள் தூவப்பட்டு இருக்கிறது. கீழே பிரணிதா அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் . இதுதான் பெண் அடிமைத்தனம் , இதனை ஊக்குவிக்கலாமா என சரமாரியாக கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர். 







பிரணிதா பதிலடி :


இதற்கு பதிலளித்த பிரணிதா, “ இந்த சடங்கு நான் சிறு வயதில் இருந்தே நம்பும் ஒன்று . அதனை நான் பின்பற்றக்கூடாதா ? , எனது புகைப்படத்திற்கு வந்த கமெண்ட்ஸ்களில் 90 சதவிகிதம் ஆதரவாகத்தான் வந்தது , மீதமுள்ள 10 சதவிகித நெகட்டிவ் கமெண்டுகளை நான் கண்டுகொள்ள விரும்பவில்லை. நான் ஒரு நடிகை  களம் அதன் கவர்ச்சிக்கு பெயர் பெற்றது, நான் பார்த்து வளர்ந்த ஒரு சம்பிரதாயத்தை முழுமையாக பின்பற்ற முடியாது என்று அர்த்தம் இல்லை, என் உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் அதை செய்திருக்கிறார்கள். நான் கடந்த வாரம் , திருமணமான சமயம் என ஒவ்வொரு முறையும் இந்த பூஜையை செய்வேன் . அந்த புகைப்படங்களை பதிவேற்றவில்லை “ என்றார்.