”என்னுடைய பயம்தான் மத்தவங்களுக்கு பாடமா மாறுது' பிரகாஷ் ராஜ் என்ன சொன்னார்?

பிரகாஷ் ராஜ் தனது அரசியலால், இப்போது பலர் தன்னுடன் வேலை செய்வதில்லை என்று தெரிவித்துள்ளர்!

Continues below advertisement

காமெடி, குணசித்திரம், வில்லன் என எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் தன்னுடைய பங்களிப்பைச் சிறப்பாக மேற்கொள்ளும் நடிகராகவும், தமிழ்நாட்டின் `செல்லம்’ எனவும் கொண்டாடப்படுபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தன்னுடைய சமூகப் பணி, தைரியமான அரசியல் கருத்துகள் முதலானவற்றால் அனைவரையும் ஈர்ப்பார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

Continues below advertisement

அவர் மத்திய அரசின் தற்போதைய அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பதற்காக அறியப்படுகிறார். தொடர்ந்து அவர் சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகள் குறித்து ட்வீட் செய்து விமர்சித்து வருகிறார். ஆனால் இவை அனைத்தும் ஒரு விலையில் வருகின்றன என்பதை ஒப்புக்கொள்கிறார். அரசியலில் அவரது ஈடுபாடு இப்போது அவரது வேலையை பாதிக்கத் தொடங்கியுள்ளது மற்றும் பல ஆண்டுகளாக அவர் திரையுலகில் ஏற்படுத்திய உறவுகளை பாதிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ் கூறும்போது, ​​“இப்படி பேசுவதால், எனது வேலை மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்த இழப்பை சந்திக்கத் தயாராக தான் உள்ளேன். எனது பயம் யாரோ ஒருவரின் சக்தியாகிவிடும் என்று நான் எப்போதும் உணர்கிறேன்."

ஆனால், தனது திரைப்பணியை தாண்டி செய்யும் சமூக வேலைகள் குறித்து சிறிதும் வருத்தப்படவில்லை என்கிறார். "இப்போது ​​யார், யார் என்று எனக்குத் தெரியும். நான் இப்போதுதான் சுதந்திரமாக உணர்கிறேன், ஏனென்றால் நான் என் குரலை உயர்த்தாமல் இருந்திருந்தால், என் நடிப்பிற்காக ஒரு நல்ல நடிகனாக அறியப்பட்டிருப்பேனே தவிர, நான் யார் என்பதற்காக அல்ல. அப்படிச் செய்வது ஒரு செலவுடன் வந்தாலும், என்னால் அதை சமாளிக்க முடியும் ”என்று அவர் கூறுகிறார். மேலும் “பல நடிகர்கள் அமைதியாக இருக்கிறார்கள், நான் அவர்களைக் குறை கூறவில்லை, ஏனென்றால் அவர்களால் அதை சமாளிக்க முடியாது. அதனால் அது அவர்கள் தவறு என்று சொல்லமாட்டேன்” என்றார்

தற்போது தமிழில் விஜய்யின் 'வாரிசு', கன்னடத்தில் 'கப்சா' உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார். இதற்கு முன், இயக்குநர் மணிரத்னத்தின் தமிழ் காவியமான பொன்னியின் செல்வன் 1- இல், ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தியப் படங்களில் ஒன்றாக அது திகழ்கிறது.

Continues below advertisement