Just In





Kaushik LM Passes Away : பிரபல திரைப்பட விமர்சகர் கெளஷிக் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள், திரையுலகினர்..
பிரபல திரைப்பட விமர்சகர் கவுசிக் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியிலும், திரைப்பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தமிழ் யூ டியூப் சேனல்களில் திரைப்பட விமர்சகராக பணியாற்றியவர் கௌஷிக். இவருக்கு வயது 35. நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் என்று அசத்தி வந்த கௌசிக் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவு திரைப்பிரபலங்கள், பத்திரிகை நண்பர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜீவி 2ம் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பங்கேற்க இருந்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவரை அழைத்தும் கௌஷிக் செல்போனை எடுக்கவில்லை. இதன் பின்னரே, கௌஷிக் உயிரிழந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு 2 மணியளவில் கௌஷிக் தூங்கச் சென்றுள்ளார். அப்போது, தூக்கத்திலே மாரடைப்பு ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பொறியியல் பட்டதாரியான கௌஷிக் தமிழின் முன்னணி யூ டியூப் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக, திரைப்பட விமர்சகராக பணியாற்றி மிகவும் புகழ்பெற்றவர். அவரது மறைவுக்கு கீர்த்தி சுரேஷ், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்பட பல திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த செய்தியை நம்பவே முடியவில்லை. இதைக் கேள்விப்பட்டதும் என்னிடம் இருந்து வார்த்தைகளே வரவில்லை. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். நீங்கள் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை கௌஷிக் என்று பதிவிட்டுள்ளார்.
எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில், கௌஷிக் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். வெங்கட் பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நம்பவே முடியவில்லை. இரு நாட்களுக்கு முன்புதான் அவருடன் பேசினேன். வாழ்க்கை உண்மையிலே கணிக்க முடியாதது. கௌசிக் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.
கௌசிக்கின் ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்