மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது. ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள பொன்னி நதி என்ற பாடலை ஏ.ஆர் ரகுமான் மற்றும் பாம்பா பாக்யா ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடலுக்கான வரிகளை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். இப்பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.



“என்ன மாமா செளக்கியாமா”


சென்னையில்  ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாடலான  ‘பொன்னி நதி’ பாடல் வெளியீடப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கார்த்தி, “என்ன மாமா செளக்கியாமா.. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இது நம்ம படம். தமிழர்களின் படம். படத்தின் கதை அனைவருக்கும் தெரிந்தாலும், இந்தப்படம் எப்படி உருவாகி இருக்கிறது என்பதை பார்க்க அவ்வளவு ஆர்வம் இருக்கிறது. இந்த மாதிரி படம் எடுக்க இன்னொரு இயக்குநர் பிறந்து 30 வருடங்கள் வளர்ந்து வரவேண்டும் என்று கார்த்தி தெரிவித்தார்


”கார்த்தி போன்ற நண்பன் கிடைப்பது கடினம்”


பாடல் வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி பேசும் போது, “  நல்ல ஷாட்டுக்கு கைத்தட்டக்கூடிய மக்கள் நம் தமிழ் மக்கள். எனக்கு குதிரை ஓட்டம் பெரிதாக தெரியாது. பயமும் உணடு கார்த்திதான் மச்சி வா பார்த்துக்கலாம். நான் சொல்லி தருகிறேன் என்று அழைத்து செல்வார். கார்த்தி போன்ற நண்பன் கிடைப்பது உண்மையில் கடினம். இதில் நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறோம். பொன்னியின் செல்வன் படம் உங்களுக்காக எடுத்து இருக்கிறோம்” என்று பேசினார். 


Also Read: Ponni nadhi: ரெண்டு லட்டு திங்க ஆசையா? ஒரே மேடையில் வந்தியதேவன் - அருள்மொழிவர்மனுக்கு ரூட் போட்ட இளம்பெண்!