கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு  மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் (பாகம் 1) திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதத்தில் வெளியானது.  விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி என, பெரும் நடிகர் பட்டாளமே அப்படத்தில் நடித்தது.


திரையரங்களில் கோடிக்கணக்கான வசூலை குவித்த இப்படம், ஓடிடி தளமான அமேசான் ப்ரைமிலும் வெளியானது. தொடர்ந்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பும் முன்னதாகவே நடந்து முடிந்தது.






பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் எப்போது..?


நேற்றைய தினத்தில், இன்று மாலை 4 மணிக்கு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய தகவல் வெளிவரும் என லைகா நிறுவனத்தினர், அவர்களின் சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டு இருந்தனர். இன்று வரப்போகும் தகவல், இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் குறித்தும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது;


 






மற்றொரு பக்கம், நேர்காணல் ஒன்றில் உதயநிதி, “ பொன்னியின் செல்வன் அடுத்தாண்டில் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லியிருந்தார். இதனால், ரெட் ஜெயண்ட் மூவிஸ் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் விநியோகத்தை வாங்கியிருக்கலாம் என்ற பேச்சும் சினிமா வட்டாரத்தில் சுழன்று கொண்டு இருந்தது. தற்போது, ஆர்வமாக இருந்த ரசிகர்களின் குழப்பத்தை போக்கும் வகையில், பொன்னியின் செல்வன் படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை அதிகாரபூர்வமாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.