ஜெய்பீம் படக்குழுவினர் மீது காப்புரிமைச் சட்டத்தின்படி சென்னை சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டைன்மெண்ட்ஸ் உள்பட குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொளஞ்சியப்பன் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்களது வாழ்க்கையின் உண்மை சம்பவத்தை தங்கள் அனுமதி இல்லாமல் திரைப்படமாக்கியதாக கூறி கொளஞ்சியப்பன் தொடர்ந்த வழக்கு விசாரணையில்  சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


ராஜாக்கண்ணுவின் உறவினரான கொளஞ்சியப்பன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வரும் 26ம் தேதிக்குள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.