சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் கடந்த ஜனவரி 10 ஆம் ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் கதை திருடப்பட்டது என வருண் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். படத்தை வெளியிட தடை கோரிய அவரது மனுவை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. தற்போது பராசக்தி திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்கக் கோரி வருண் ராஜேந்திரன் மறுபடியும் மனுதாக்கல் செய்துள்ளார்.

Continues below advertisement

கடந்த பொங்கலை வெளியிட்டு சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக வெளியானது பராசக்தி. தமிழக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிகழ்வான இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையக் கதைக்களமாக கொண்டு இப்படம் உருவானது. இதனால் படத்தின் மீது அனைத்து தரப்பினருக்கும் பெரியளவில் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் அரசியல் படத்தைக் காட்டிலும் இப்படம் ஒரு சராசரியான ஹீரோ வில்லன் படமாக மட்டுமே இருந்தது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. சுமார் ரூ 150 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக கூறப்படுகிறது. அதே நேரம் படம் 100 கோடிவரை வசூல் செய்து வசூல் ரீதியாக தோல்வியை தழுவியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

கதை திருட்டு வழக்கு 

பராசக்தி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தின் கதை தன்னிடம் இருந்து திருடப்பட்டது என வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்தை தடை செய்ய மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் தன்னிடம் இருந்து கதை திருடப்பட்டது என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் எந்த ஆதாரமும் சமர்பிக்காததால் அவரது மனுவை ஏற்க மறுத்தது உயர் நீதிமன்றம். 

Continues below advertisement

பராசக்தி ஓடிடி ரிலீஸ் 

திரையரங்கில் வெளியாகி 25  நாட்களை கடந்துள்ள பராசக்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை ஓடிடியில் வெளியிட தடை  விதிக்க வேண்டும் என கூறி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இந்த வழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.