சீரியலை விட தனது நிஜ வாழ்க்கையில் கணவரால் மிகுந்த கொடுமையை சந்தித்தேன் என பாவம் கணேசன் சீரியலில் நடித்துவரும் விலாசினி தெரிவித்துள்ளார்.


இளையராஜா மனைவியின் சகோதாரர் மகளான விலாசினிக்கு சிறுவயது முதலே பாடவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. வாய்ப்பு தேடி அலைந்த நிலையில் தான் தனது அண்ணன்களான கார்த்திராஜா,யுவன், பிரேம்ஜி ஆகியோரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். இதன் பலனாக பிரியாணி படத்தில் ஒரு பாடலில் சில வரிகளைப் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இசைத்துறையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனையடுத்து ரேடியோ ஜாக்கியாக தனது பணியை ஆரம்பித்தார். பின்னர் ஆதித்யா டிவியில் தொகுப்பாளினியாகவும் வலம் வந்த இவருக்கு நடிப்பின் மூலம் சாதிக்க வேண்டும் என்று நினைத்து வாய்ப்புகளை தேடி அலைத்துள்ளார். ஆனால் தனது நிறத்தின் காரணமாக பல இடங்களில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தான் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாவம் கணேசன் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.



இந்த சீரியலின் நாயகன் கணேசனின் மூத்த அக்கா சித்ரா கதாபாத்திரத்தில் வரும் விலாசினியின் நடிப்பு பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதில் கணவரின் பேச்சுக்கு அடங்கி பயந்த சுபாவம் கொண்டவராக நடித்துவரும் இவர், தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் பேச வேண்டும் என்றாலே கணவரிடம் அனுமதி பெற வேண்டும்,. மேலும் கணவர் படுத்தும் அத்தனை கொடுமைகளையும் சகித்துக்கொண்டு வாழ்ந்துவரும் கதாபாத்திரத்தில் தான் விலாசினி வலம் வருகிறார். குறிப்பாக இந்த கதாபாத்திரம் பெரும்பாலான பெண்கள் கணவர் வீட்டில் படும் துயரங்களைப் பிரபலிக்கும் விதமாக அமைந்ததால் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுவருகிறார்.


இந்நிலையில்தான் சீரியலில் மட்டும் இல்லை நிஜ வாழ்க்கையிலும் பல துன்பங்களை அனுபவித்து வருவதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார். சித்ரா கேரக்டர் தனது நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் சபரி ஞானபிரகாசம் என்பவருடன் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண வாழ்க்கை எனக்கு கசப்பாக மாறிவிட்டதாகவும்,  சீரியலில் வரும் கணவரை விட நிஜ வாழ்க்கையில் என்னுடைய கணவர் மிகவும் மோசமானவர் என தெரிவித்துள்ளார். அவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு நிஜ வாழ்க்கையில் தன்னை ஏமாற்றிவிட்ட நிலையில்தான் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்துவருவதாக கூறியுள்ளார்.



சின்னத்திரையில் பிஸியாக வலம் வரும் விலாசினி டப்பிங் ஆர்டிஸ்ட் துறையிலும் வெற்றி வாகை சூடிவருகிறார். மருது படத்தில் ஸ்ரீதிவ்யா உள்பட பல படங்களில் நாயகிகளுக்கு டப்பில் குரல் குடுத்துள்ளார். ஆனால் இவருக்கு நயன்தாரா மற்றும் காஜல் அகர்வாலுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளா். இதோடு குடும்ப வாழ்க்கை முதல் பல இடங்களில் சோதனைகளை மட்டும் தான் சந்தித்தேன். ஆனால் விடா முயற்சியுடனும், திறமையோடும் போராடியதன் விளைவு தான் தற்போது சாதித்து நிற்கிறேன் என்று தெரிவித்துள்ளார் விலாசினி.