Pa.ranjith | இந்தியில் ரீமேக்காகும் பா.ரஞ்சித் திரைப்படம்! - குஷியில் ரசிகர்கள் !

முன்னதாக  பார்த்திபனின் ஒத்த செருப்பு, விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன், சூர்யா நடித்த சூரரைப்போற்று உள்ளிட்ட படங்களும் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

Continues below advertisement

அட்டக்கத்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் பா.ரஞ்சித் . இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஒடிடியில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக பலரின் பாராட்டை வென்றது. இந்த படம் முற்றிலுமாக கபிலனின் பார்வையில் உருவாகியிருந்தது. பொதுவாகவே ஒரு திரைப்படத்தை உருவாக்குவர்தற்கு முன்னதாக அதனை நாவலாக எழுதும் இயல்புடைய இயக்குநர் பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரையின் மாறுபட்ட கோணத்தை வெப் சீரிஸாக எடுக்கும் எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2014 ஆன் ஆண்டு கார்த்தி , கேத்ரின் தெரசா,கலையரசன் உள்ளிட்டோர்  நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சுவர் அதனை சுற்றி நடக்கு அரசியல், கொலைகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்திருந்தது. மெட்ராஸ் இந்தி ரீமேக் குறித்து பேச்சு வார்த்தை தற்போது நடைப்பெற்று வருகிறதாம் , விரைவில் படத்தை யார் இயக்க உள்ளார்கள், கார்த்தி மற்றும் கலையரசன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளார்கள் போன்ற பிற அறிவிப்புகளும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement


சமீப காலமாகவே இந்தியில் தமிழ் படங்களை ரீமேக் செய்வது ட்ரெண்டாக  மாறிவிட்டது. முன்னதாக  பார்த்திபனின் ஒத்த செருப்பு, விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன், சூர்யா நடித்த சூரரைப்போற்று படமும் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனை மும்பையின் பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சூர்யா தயாரிக்கவுள்ளார்.அதேபோல  லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் மற்றும் கைதி ஆகிய படங்களும் பாலிவுட்டில் ரீமேக் ஆவதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது மெட்ராஸும் அந்த பட்டியலில் இடம்பெறவுள்ளது. இது பா,ரஞ்சித்தின் ரசிகர்களை குஷியடைய செய்துள்ளது. அட்டக்கத்தி மற்றும்  மெட்ராஸ் போன்ற திரைப்படங்களை வட சென்னையை மையமாக வைத்து இயக்கியிருந்தார் ரஞ்சித்.


காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த அட்டக்கத்தி திரைப்படத்திற்கு இன்றளவு வரவேற்பு உள்ளது. இதற்கு பிறகு  அரசியல் பேசும் படங்கள் எடுப்பதிலேயே ரஞ்சித் கவனம் செலுத்தி வந்தார். எப்போது மீண்டும் காதல் சப்ஜெக்டை கையில் எடுக்க போகிறார் என காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்  விதமாக  “நட்சத்திரம் நகர்கிறது “  என்ற காதல் சப்ஜெக்ட் படத்தை கையில் எடுத்துள்ளார். இதில் மனிதர்களுக்கு இடையேயான காதலை ,பல்வேறு கோணங்களில்  காட்டவுள்ளாராம் இயக்குநர். முன்னதாக சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகாக  பிர்சா முண்டா என்ற  சுதந்திர போராட்ட வீரரின் கதையைத்தான் பா,ரஞ்சித் இயக்க போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்தான். 

Continues below advertisement
Sponsored Links by Taboola