மீண்டும் கொரொனா தொற்று பரவலால் மக்கள் வீட்டுக்குள் முடங்கும் சூழல் உருவாகியிருக்கிறது. இதனால் தொலைக்காட்சிகளும் மக்களுக்கேற்ப தங்களது நிகழ்ச்சிகளை மாற்றி வருகின்றனர். குறிப்பாக சீரியல்கள்... தினம் தினம் விதவிதமான சீரியல்கள் களம் கண்டு வரும் நிலையில், இந்த கொரோனா சூழ்நிலை, அதன் மீதான கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்த்துள்ளது. இவற்றுக்கு போட்டியாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களும் புது கதாநாயகிகளை களமிறக்கியும் எதிர்பாராத ட்விஸ்ட்களை புகுத்தியும் சுவாரஸ்யத்தை கூட்டி வருகின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. 


அந்த வரிசையில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் கண்ணானே கண்ணே சீரியல் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றது. ராகுல் ரவி, நிமிஷிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்த சீரியலில் பப்லு ப்ரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.






 


யுவா மற்றும் மீரா தொடர்பான காட்சிகள் அதிக கவனத்தை ஈர்த்தது. தற்போது 300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் நடிகை ஒருவர் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 






இந்த சீரியலில் யமுனா கேரக்டரில் நடித்த மீராவின் சித்தி மற்றும் ப்ரித்விராஜின் 2-வது மனைவியாக நடித்து வந்த நிதியா தாஸ் தற்போது அந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக சொல்லப்படுகிறது. இவர் ஏன் விலகினார் என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. 


கொல்கத்தைவை சேர்ந்த நித்யா தாஸ், தமிழில் சில படங்களிலும், மலையாளத்தில் பல படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அக்கா, பைரவி, இதயம் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.