தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் நிஹாரிகா. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகள் இவர்.  சினிமா மட்டுமின்றி சின்ன திரையிலும் கலக்கி வருகிறார் நிஹாரிகா. கடந்த சில மாதங்களாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் தற்போது சட்ட ரீதியாகவே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். இது தொடர்பாக நிஹாரிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானும் சைதன்யாவும் பரஸ்ரம் பிரிகிறோம். உங்களின் கனிவும், பண்பும் தேவைப்படுகிறது. தங்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. எங்களுக்கு இப்போது privacy வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 






நிஹாரிகா 'ஓக்க மனசு' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். 2016 முதல் 2019-ஆம் ஆண்டு வரை ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சைதன்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. நிஹாரிகாவும் -சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அரண்மனையில் நடந்த இவர்களின் திருமணத்தில் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்றனர். நிஹாரிகாவின் கணவர் சைதன்யா, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், அவரது தந்தை காவல்துறையில் உயர் அதிகாரி எனவும் கூறப்படுகிறது. 


மேலும் நிஹாரிகா-சைதன்யா திருமணம் சிரஞ்சீவியின் தலைமையில் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாகவே நிஹாரிகாவுக்கும் அவரது கணவர் சைதன்யாவுக்கும் பிரச்சனை இருந்ததாகவும், அதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து இருவர் தரப்பில் இருந்தும் எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது இருவரும் சட்ட ரீதியாக பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. நிஹாரிகா - சைதன்யா இருவரும் பிரிந்ததை தெலுங்கு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. அதேபோல், நிஹாரிகா தரப்பில் இருந்தும் இந்த விவாகரத்து செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்படவில்லை. இருவருமே பரஸ்பரம் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. அதிகாரப்பூர்வமாக விவாகரத்து உறுதியானதும், நடிகை நிஹாரிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த திருமண போட்டோக்களை டெலிட் செய்தது  குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க 


Tomato Price Hike: எட்டாக்கனியாய் மாறும் தக்காளி.. செய்வதறியாது திகைத்து நிற்கும் மக்கள்.. தமிழ்நாட்டின் தக்காளி விலை நிலவரம்..