பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை வம்பிழுக்கும் வகையில் நடிகை வனிதா விஜயகுமார் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளதாக இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


கடந்த ஒரு வாரமாக இணையம் முழுவதும் ஒரு திருமணம் பற்றிய பேச்சுக்களே அதிகம் இடம் பெற்றிருந்தது. அது பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் - நடிகை மகாலட்சுமி கல்யாணம் தான். சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்களிடத்தில் நன்கு பிரபலமானவர் மகாலட்சுமி. ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற இவர்  சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ராதிகா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் மூலம் மகாலட்சுமியின் சின்னத்திரை பயணத்தில் மிக முக்கியமானதாக அமைந்தது.  






இதனிடையே கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி மகாலட்சுமி, தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவிந்திரன் சந்திரசேகரை திருமணம் செய்துக் கொண்டதாக வெளியான தகவலை பலராலும் கற்பனை செய்துக் கொள்ள கூட முடியவில்லை. அதிக பருமனாக இருக்கும் அவரை மகாலட்சுமி பணத்துக்காக திருமணம் செய்துக் கொண்டதாக இணையத்தில் கடுமையான விமர்சனம் எழுந்தது. ஆனால் இந்த திருமணம் காதல் திருமணம்  என்றும், பணத்துக்காக பண்ணிருந்தாங்கன்னா என்னை விட எத்தனை பேரு நல்லா இருக்காங்களே. என்னை எதுக்கு பண்ணனும் என ரவீந்தர் - மகாலட்சுமி நேர்காணல் ஒன்றில் விளக்கமளித்தனர். 


அதேசமயம்  வனிதா விஜயகுமார் பீட்டர்பாலை 3வது திருமணம் செய்ததை கடுமையாக விமர்சித்தார் ரவீந்தர். அவரே இப்படி 2வது கல்யாணம் பண்றது நியாயமா என பலரும் கேள்வியெழுப்பினர். அவர்களின் கதையும் எங்கள் கதையும் வேறு வேறு. அதன்பிறகு பிரச்சனை சரியாகி விட்டது. ஒருவேளை  எங்களுக்கு திருமணமானது தெரிந்தால் அவர் வாழ்த்தியிருப்பார் எனவும் ரவீந்தர் கூறியிருந்தார். இந்நிலையில் வனிதா பதிவிட்ட ட்விட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. 






அதில் மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியான பிஸியாக இருக்கிறேன். கர்மா மோசமானது. அவளுக்கு அதை திருப்பி கொடுக்க தெரியும்.. நான் அவளை முழுமையாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். பெயர் குறிப்பிடாத இந்த பதிவு ரவீந்தர் - நடிகை மகாலட்சுமி ஜோடிக்கு தான் என இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.