நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் வருகிற 9 ஆம் தேதி  திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

  


தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகையான நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது ஊரறிந்த கதை. 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த ஜோடி வரும் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறது. முதலில் இந்த திருமணம் திருப்பதியில் நடக்க இருப்பதாக சொல்லப்பட்டநிலையில் பின்னர் மகாபலிபுரத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.


முகூர்த்தம் நேரம் என்ன?


அந்தத்தகவலின் படி, மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபவ் ஸ்டார் ஹோட்டலில்  காலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்த நேரத்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.




 


இந்த திருமணத்தில் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 30 பேர் ரஜினி, விஜய், அஜித், நெல்சன், விஜய்சேதுபதி, சமந்தா போன்ற விஐபிக்கள் எனவும் சொல்லப்படுகிறது.


காதல் மலர்ந்த நேரம்


போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். இந்தப்படத்தின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.


 


 




அதனைத்தொடர்ந்து பல விருது நிகழ்ச்சிகளில் ஒன்றாக வலம் வந்த இந்த ஜோடி, அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வந்த இந்த ஜோடி புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தது.


கேரியரிலும் இணைந்தே பயணம் 


தொழிலும் ஒன்றாக பயணம் செய்த இவர்கள்  ‘ரெளடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகின்றனர்.  அந்த வகையில் இவர்கள் தயாரித்த  ‘ராக்கி’  ‘கூழாங்கல்’ உள்ளிட்ட படங்கள் கவனம் பெற்றன. பொதுவாக வெளியே அதிகம் தென்படாத நயன்தாரா விக்னேஷ் சிவனுடனான காதலுக்கு பிறகு, பல கோயில்களுக்கு சென்று சாமி செய்து வருகிறார். அண்மையில் நயன்தாரா சமந்தா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற  ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கியிருந்த விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.