கொச்சின் விமான நிலையத்தில் விக்னேஷ்சிவன் நயன்தாரா ஜோடி கைகோர்த்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. 


திருமணம் முடிந்த கையோடு திருப்பதி சென்ற நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி தற்போது கொச்சின் சென்றதாக தெரிகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கொச்சின் விமானநிலையத்தில் இருவரும் கைகோர்த்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை ரசிகர் ஒருவர் எடுக்க அந்த நபரை விக்னேஷ் சிவன் கண்டுகொள்ளாமல் சென்றார். ஆனால் நயன்தாரா அந்த ரசிகரை ஒரு சின்ன புன்முறுவலோடு கடந்து சென்றார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.






முன்னதாக, தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ்சிவன் திருமணம் நேற்று முன்தினம் மாமல்லபுரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர். திருமணம் முடிந்த கையோடு இந்த ஜோடி திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர்.






தொடர்ந்து மாட வீதிகளில் இந்த ஜோடி போட்டோஷூட் நடத்தினர். அப்போது புகைப்படக்காரர்கள், நயன்தாரா, விக்னேஷ் சிவன் செருப்பு கால்களுடன் சென்றது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் திருப்பதி சம்பவம் குறித்து விளக்கம் தெரிவித்து விக்னேஷ் சிவன் தேவஸ்தானத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி சம்பவத்திற்காக மன்னிப்புக் கோரியிருந்தார்.