அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மலையாள திரைப்படம் கோல்டு. ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் மாதமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம்,படத்தின் வேலைப்பாடுகள் முழுமை அடையாத காரணத்தினால் ரிலீஸ் தள்ளிப்போனது. 






இந்நிலையில் பிரித்விராஜ், நயன்தாராவின் அடுத்த திரைப்படமான கோல்டு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 1 ஆம் நாள் கோல்ட் திரைப்படம் திரைக்கு வருகிறது.



சுப்ரியா மேனன் மற்றும் லிஸ்டன்ஸ் ஸ்டீபன் தயாரிப்பில் ராஜேஷ் முருகேசன் இசையில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் திரைப்படம் கோல்டு.கடந்த செப்டம்பர் மாதம்,  படத்தின் வேலைப்பாடுகள் முடிவடையாத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தள்ளி போகிறது என்ற அறிவிப்பை இயக்குனர் வெளியிட்டிருந்தார். மேலும் யாரும் வேகாத உணவை விரும்ப மாட்டார்கள். ஒரு சமையல்காரர் ஆக, அதை நன்றாக சமைத்து, பிறகு  பரிமாற வேண்டும் என நான் முடிவெடுத்துள்ளேன். ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு ரிலீஸ் செய்யாத காரணத்திற்கு, நான் வருந்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.






ஏழு வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரைப்பயணத்தை தொடங்குகிறார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். பிரபல மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்பட இயக்குனர் தான் அல்போன்ஸ். நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிரேமம். இந்த திரைப்படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் மெகா ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து தெலுங்கிலும் நாக சைதன்யா நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாரா, பிரித்விராஜ் நடிப்பில் கோல்டு திரைப்படம் வரும் டிசம்பர் ஒன்றாம் நாள் வெளியாக உள்ளது. பிரேமம் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு இந்த திரைப்படத்திற்கு கிடைக்கப்பெறுமா என்பதை காத்திருந்து காண்போம்.