தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் 'நயன்தாரா' வின் ரீசண்ட் ரிலீஸ் 'கனெக்ட்'. இத்திரைப்படம் புது முயற்சியுடன் களமிறங்கி வெற்றி வாகையை சூட்டியுள்ளது. 90 நிமிடங்களில் இடைவேளை இல்லாது வகையில் இத்திரைப்படம் வெளியாகி பார்வையாளர்களுக்கு புதிய அனுவத்தை கொடுத்துள்ளது.இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவனின் 'ரவுடி பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்தது.'மாயா','கேம் ஓவர்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கியுள்ளார். இந்தாண்டு நடிகை நயன்தாராவிற்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனிற்கும் திருமணமானது. இந்த நிலையில் தற்போது, நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்;

  



                         


 


இந்த திரைப்படம் குறித்து நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்த ஆண்டு எனக்கு மிக  நிறைவான ஆண்டாக இருந்தது.நான் நன்றியுணர்வால் நிரம்பி இருக்கிறேன்.எங்களது ' கனெக்ட்' திரைப்படத்தை பார்த்து ஆதரவளித்த சினிமா ஆர்வலர்களுக்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றி. மேலும் ,டிக்கெட்டை மீண்டும் மீண்டும் பதிவு செய்து பார்ப்பவர்களுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.


இத்திரைப்பட கதைக்கருவிலே தனித்துமானது; பார்வையாளர்களை பூர்த்தி செய்ய வேண்டும் என நாங்கள் முயற்சித்துள்ளோம். மக்களின் பார்வையை மனதில் கொண்டு எங்கள் முழு குழுவும் மிகுந்த நம்பிக்கையுடனும்  நேர்மையுடனும் பணியாற்றியுள்ளோம். என்னை நம்பியதற்கும் ஒவ்வொரு படியிலும் என்னுடன் இருந்ததற்கும் எனது இயக்குனர் அஷ்வின் சரவணனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


உங்களது இயக்கம் உலகத்தரம் வாய்ந்தது. உங்களுடன் இணைவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தான். எனது தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனிற்கும்,தயாரிப்பு நிறுவனம் ரவுடி பிக்சர்ஸிற்கும் எனது காதலையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் தான் இத்திரைப்படத்தை உறுதியோடு அடுத்த மைலுக்கு எடுத்து சென்றுள்ளீர்கள். இத்திரைப்படத்தை சிறந்த முறையில் தயாரித்து,விநியோகம் செய்து ரிலீஸ் வரை கொண்டு சென்றதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.